Sunday, December 26, 2010

Spectrum corruption the himalayan scandal

ஸ்பெயின் தேசத்து காளை போல ஸ்பக்ட்ரம் ஊழல்!

ஸ்பெயின் தேசத்துக் காளைகளை வீரர்கள் ‘அடக்குவதை’ நீங்கள் தொலைக்காட்சியில் பார்த்திருக்கலாம்; கட்டுக்கடங்காத கோபத்தோடு அந்தக் காளை பாயும். ஆனால் எதைப் பார்த்து? அதில் தான் இருக்கிறது அந்த ‘வீரத்தின்’ சூட்சுமம். காளையை அடக்கும் வீரன் கையில் ஒரு வண்ணத் துணியைப் பிடித்து அதன் முன் ஆட்டிக் கொண்டிருப்பான். அதை ஏதோ விரோதமான ஒன்று என நினைத்து ஏமாறும் காளை அதன் மேல் பாயும். இப்படி தொடர்ந்து பாய்ச்சல் காட்டிக் காட்டி தனது சக்தியை எல்லாம் இழந்த ஒரு தருணத்தில் அந்த வீரன் தன் கையில் இருக்கும் கத்தியை காளையின் மேல் பாய்ச்சுவான். இது அக்காளையைப் பொருத்தவரையில் ஒரு கண் கட்டி வித்தைதான். அதன் கண்களைக் கட்டி ஏமாற்றி – அதனை வெல்கிறான் அந்த வீரன்.

இப்போது இந்திய தேசத்தை அந்தக் காளையாக உருவகப்படுத்திக் கொள்ளுங்கள். அதன் பாய்ச்சலை இந்தத் தேசத்து மக்களின் ஆத்திரம் என்பதாக வைத்துக் கொள்ளுங்கள். அந்த வண்ணத் துணி தான் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.இராசா. அவரைப் பிடித்து ஆட்டும் கைகள் தான் மன்மோகன் சிங். அந்தக் கைகளை இயக்கும் மூளை தான் பன்னாட்டு நிறுவனங்களும் உலக வங்கியும். இதெல்லாம் நடந்து கொண்டிருக்கும் களம் தான் ஸ்பெக்ட்ரம் ஊழல்.

இன்னும் கொஞ்சம் எளிமைப்படுத்த வேண்டுமானால், ஒரு மாபெரும் பந்தி நடந்து முடிந்துள்ளது – அதில் பரிமாறப்பட்டது நமது நாட்டின் முக்கியமான ஒரு இயற்கை வளம். பந்தியை நடத்தியது மன்மோகன் தலைமையிலான ஆளும் வர்க்கமும் பா.ஜ.க, காங்கிரசு, திமுக உள்ளிட்ட ஆளும் வர்க்கக் கட்சிகளும் – தின்று ஏப்பம் விட்டது பன்னாட்டுக் கம்பெனிகள் முதல் உள்நாட்டுத் தரகு முதலாளிகள் வர்க்கம் வரை – பந்தி பரிமாறியது ஆ.இராசா. இப்போது விவகாரம் வெளியானவுடன் பரிமாறியவனை மட்டும் பலி கொடுத்து விட்டு மற்றவர்கள் எஸ்கேப்பாகப் பார்க்கிறார்கள்.

ஸ்பெக்ட்ரம்: மக்களுக்குச் சொந்தமான ஒரு இயற்கை வளம்!

ஸ்பெக்ட்ரம் எனப்படும் மின் காந்த அலைக்கற்றையை ஒரு வளம் என்று எப்படிக் கொள்ள முடியும்? நமது நாட்டில் இதற்கு முன் ஆறுகளையும் மலைகளையும் நிலங்களையும்…. ஏன் கடலையே கூட பன்னாட்டுக் கம்பெனிகளுக்கும் தரகு முதலாளிகளுக்கும் பட்டா போட்டுக் கொடுத்துள்ளனர். அவையெல்லாம் பௌதீக உருவகமாக நம் கண் முன்னே நிற்பதால் அந்த திருட்டுத்தனம் நமக்கு எளிதில் புரிந்தது. ஆனால், திருட்டு என்று வந்து விட்டபின் கண்ணுக்குத் தெரியும் பொருளானால் என்ன கண்ணுக்குத் தெரியாத மின்காந்தப் புலமாக இருந்தால் என்ன?

நடந்து முடிந்துள்ள இந்தத் திருட்டைப் புரிந்து கொள்ளும் முன், மின்காந்த அலைக்கற்றையை ஒரு இயற்கை வளமாகக் கொள்வது எப்படி என்பதைத் தெரிந்து கொள்வது அவசியம்.

இன்று நமது சட்டைப் பைக்குள் திணித்து வைக்கப்பட்டுள்ள செல்போனில் இருந்து கருணாநிதி ‘பாசத்தோடு’ அளித்துள்ள இலவச தொலைக்காட்சி வரையில் வளி மண்டலத்தில் ஒரு குறிப்பிட்ட அலைவரிசையில் தான் இயங்குகின்றன. கிழட்டு எந்திரனை நமது படுக்கையறைக்குள் எட்டிப் பார்க்க வைத்ததையும், நாம் செல்லும் இடமெல்லாம் ‘கேளுங்க கேளுங்க கேட்டுக்கிட்டே இருங்க’ என்று நுகர் பொருட்களின் விளம்பரங்களை நமது காதுகளுக்குள் திணிப்பதையும் சாத்தியப்படுத்தியிருப்பது இந்த அலைவரிசைகளில் இயங்கும் தொலைக்காட்சிகளும் பண்பலைகளும் தான்.

நிலத்தின் வளங்கள் எப்படி இயற்கையின் கொடையோ அதே போல் வளி மண்டலத்தின் படர்ந்திருக்கும் மின்காந்த அலைவரிசையும் இயற்கையின் கொடையே.

சந்தை – மக்களை இணைக்கும் முக்கிய ஊடகமே அலைக்கற்றை!

ஆறுகள், நிலங்கள், மலைகள், சமதளங்கள், காடுகள், கடல்கள், கனிவளங்கள் உள்ளிட்ட புவியியல் அம்சங்களை உள்ளடக்கி வரையப்பட்டுள்ள எல்லைக்கோடுகள் மட்டுமே இந்தியா எனும் தேசத்தை உண்டாக்கி விடவில்லை. அதனுள் இரத்தமும் சதையுமாய் வாழும் பல்வேறு இனங்களையும் மொழிகளையும் சேர்ந்த மனிதர்களும் சேர்ந்ததே இந்நாடு.

எனில், முந்தைய புவியியல் அம்சங்களை மட்டும் தனது எஜமானர்களுக்குத் தாரை வார்த்துக் கொடுத்து விட்டால் கடமை முடிந்தது என்று இந்திய அதிகாரவர்க்கத் தரகர்கள் சும்மா இருந்து விடமுடியாதல்லவா. அடுத்து இந்த எல்லைக்கோடுகளுக்குள் வாழும் உயிரியல் அம்சங்களை என்ன செய்வது? முதலாளிகளைப் பொருத்தளவில் இந்த நூறுகோடி மக்களும் ஒரு பெரிய சந்தை.

அவர்கள் உற்பத்தி செய்து குவிக்கும் பொருட்களுக்குத் தேவை இருக்கிறதோ இல்லையோ – அவற்றை இந்த சந்தை நுகர்ந்தாக வேண்டும். அதை எப்படித் தள்ளி விடுவது? முகேஷ் அம்பானி நமது செவ்வாய்க்கிழமை மார்க்கெட்டில் ஜமுக்காளத்தில் பிளாஸ்டிக் பொம்மைகளை கடை விரித்து ‘பத்து ரூவாய்க்கு ரெண்டு’ என்று கூவும் அப்பாவி வியாபாரியா என்ன?

இவற்றையெல்லாம் மக்களிடம் கொண்டு செல்ல ஊடகம் தேவை. அந்த ஊடகங்களுக்கு தமது பிரதான நிகழ்ச்சிகளான விளம்பரங்களையும் சைடு கேப்பில் அழுகுணி சீரியல்களையும் ஒலிபரப்ப அலைவரிசை தேவை. இது சென்ற தலைமுறையினருக்கு – அடுத்த தலைமுறையினருக்கு? செல்போன்கள்!

‘இதோ நான் தூங்கி எழுந்து விட்டேன்’ என்பதில் தொடங்கி, ‘இதோ இப்போது நான் கக்கூசில் இருக்கிறேன்’ என்பதில் தொடர்ந்து, ‘இதோ எனக்கு கொட்டாவி வருகிறது’ என்பது வரைக்குமான ‘மிக முக்கிய’ தகவல்களை நண்பர்களோடு ட்விட்டரில் பகிர்ந்து கொள்வதாகட்டும்; என்ன சினிமா பார்க்கலாம், எதை வாங்கலாம், எங்கே வாங்கலாம் என்பது வரைக்குமான சகல கேள்விகளுக்குமான பதில்கள் இணையத்தில் இருக்கிறது – அது செல்போனுக்கும் வருகிறது. இது போதாதா முதலாளிகளுக்கு?

எதிர்காலத்தில் தீர்மானகரமானதொரு ஊடகமாக உருவெடுக்கும் சாத்தியம் செல்போனுக்கு உள்ளது. இதை நாம் வார்டு கவுன்சிலர் தேர்தலில் “எனக்கு ஓட்டுப் போடுங்கள்” என்று எச்சிலூற இறைஞ்சு வரும் எஸ்.எம்.எஸ் அளவுக்கு சுருக்கிப் புரிந்து கொள்ளக் கூடாது. ஒரு பெரும் சந்தையை எளிதில் தடையில்லாமல் அணுகுவதற்கான பாதை தான் அலைக்கற்றைகள். அந்தப் பாதையை, யார் – எப்படி – எந்த விதத்தில் – எந்த அளவுக்குப் – பயன்படுத்துவது என்பதை நிர்ணயம் செய்யும் அதிகாரம் உலகளவில் அந்தந்த நாடுகளின் அரசுகளுக்கே உரித்தானது.

இரண்டாம் தலைமுறை அலைக்கற்றையை ஒதுக்கியதில் பதுங்கிய மாபெரும் ஊழல்!

வானொலி, தொலைக்காட்சி, பண்பலை, செல்போன்கள் எல்லாம் குறிப்பிட்ட அலைவரிசைகளில் இயங்குவது தான். இந்த அலைவரிசை என்பதை ஒரு சாலை என்பதாக உருவகப்படுத்திக் கொண்டீர்கள் என்றால், மேலே செல்லப்பட்டுள்ள சேவைகள் ஒவ்வொன்றுக்கும் தனிப்பட்ட சாலைகள் இருக்க வேண்டும். இப்போது, ஒரே நேரத்தில் நூறு அடி அகலம் கொண்ட சாலையில் எத்தனை வாகனங்கள் பயணிக்க முடியும்? இரண்டு அல்லது மூன்று வாகனங்கள் ஒன்றுக்கொன்று இணையாக செல்லலாம் அல்லவா?

அதே போலவே, செல்போன் சேவைக்கு என்று ஒதுக்கப்பட்டுள்ள அலைக்கற்றைகளில் குறிப்பிட்ட அளவு எண்ணிக்கையில் தான் நிறுவனங்கள் இயங்கி சேவை வழங்க முடியும். இந்த அடிப்படையில் எந்தெந்த நிறுவனங்கள் சேவை அளிக்கலாம் என்பதை மத்திய தொலை தொடர்பு அமைச்சகம் முறையான டெண்டர் கோரி ஏலம் விட்டிருந்தால் நாட்டுக்கு சுமார் ஒரு லட்சத்து எழுபத்தாறாயிரம் கோடி ரூபாய்கள் வருவாய் கிடைத்திருக்கும். அந்த வருமானம் நாட்டுக்கு கிடைக்காமல் செய்யப்பட்டுள்ளது என்பது தான் மத்திய தணிக்கைத் துறையினரின் அறிக்கை வைக்கும் குற்றச்சாட்டு.

செல்போன்கள் ஒரு பெரும் சந்தையின் மக்களை நுகர் பொருட்களை நோக்கி கவர்ந்திழுக்கும் ஒரு பாதை என்பதைக் கடந்து, அதைப் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கையைக் கணக்கில் கொண்டால் – அதுவே ஒரு பெரிய சந்தை. உலகமயமாக்கலைத் தொடர்ந்து நுகர்தலையே கலாச்சாரமாகக் கொண்ட ஒரு நடுத்தர வர்க்க / மேல் நடுத்தர வர்க்கத் தலைமுறை உருவெடுத்துள்ளது. விதவிதமான செல்போன்கள் மட்டுமல்ல, அதனூடாய்க் கிடைக்கும் சேவைகளின் மேம்பாடும் இவர்களுக்கு மிக முக்கியம்.

அந்த வகையில் இந்நூற்றாண்டின் துவக்கத்தில் புழக்கத்தில் இருந்த செல்போன்களை விட தற்போது புழக்கத்தில் உள்ள செல்போன்கள் அதிக வசதிகளைக் கொண்டது. இது நுகர்வு வெறியால் தூண்டப்பட்ட இந்த புதுப்பணக்கார கும்பலை மிக அதிகளவில் செல்போன்களை நுகரச் செய்து, அதையே ஒரு பெரும் சந்தையாக நிலை நாட்டியுள்ளது. ஒருவரே இரண்டுக்கும் மேற்பட்ட செல்பேசிகளை வைத்துக் கொள்வதும், ஒரே செல்பேசியில் இரண்டு இணைப்புகளை வைத்துக் கொள்வதும் அந்தஸ்தின் அடையாளமாகக் கருதப்படுகிறது. ஒரு தொலைபேசி என்பதைக் கடந்து, பாடல்கள் கேட்க, படம் பார்க்க, இணையத்தை பாவிக்க என்று அணைத்து வசதிகளையும் உள்ளடக்கிய செல்போன் கருவிகள் தற்போது சந்தையில் குவிந்துள்ளது.

தொன்னூறுகளின் மத்தியில் இரண்டாம் தலைமுறை அலைக்கற்றையில் இயங்கும் செல்போன்கள் இந்தியாவில் அறிமுகமானது. அப்போது சந்தையில் இருந்த செல்போன் பயன்பாட்டாளர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப குறிப்பிட்ட அளவுக்கான அலைவரிசையே 2001ம் ஆண்டு ஒதுக்கீடு செய்து சேவை அளிப்பதற்கான லைசென்சுகள் விற்கப்பட்டது. அப்போதே அந்த லைசென்சுகளை அடிமாட்டு விலைக்குத் தான் விற்றுள்ளார்கள். வருவாயில் ஒரு சொற்ப சதவீதம் பங்கு எனும் அடிப்படையில் விற்கப்பட்ட போதும், செல்போன் சேவை நிறுவனங்கள் அதையும் தராமல் பட்டை நாமம் சாற்றினர்.

2001ல் நான்கு மில்லியன்களாக இருந்த செல்போன் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை, 2008ல் 300 மில்லியன்களுக்கு மேலாக உயர்ந்துள்ளது. சீனத்துக்கு அடுத்து உலகிலேயே இந்தியாசின் செல்போன் பயன்பாட்டுச் சந்தை மிகப் பெரியது. இந்நிலையில், இரண்டாம் தலைமுறை அலைக்கற்றையை 2001ம் ஆண்டு நிர்ணயிக்கப்பட்ட சந்தை விலைக்கே ஏழு ஆண்டுகள் கழித்து 2008ல் சேவை துவங்குவதற்கான புதிய லைசென்சுகளை விற்றுள்ளனர். அதுவும் முறையான டெண்டர் இல்லாமல் முதலில் வருவோருக்கு முதலில் அனுமதி (First-come-first-serve basis) எனும் அடிப்படையில், அதிகாலை ஐந்து மணிக்கே ஒப்பந்தங்களை ஏற்றும், குறிப்பிட்ட நாளுக்கு முன்பாகவே பேரத்தை நடத்தியும் முடித்துள்ளனர்.

ஒப்பந்தங்களை வென்ற ஒன்பது நிறுவனங்களில் ஸ்வான், யுனிடெக் உள்ளிட்ட பல நிறுவனங்களுக்கு செல்போன் சேவையில் எந்த முன் அனுபவமும் கிடையாது. 13 மண்டலங்களுக்கான உரிமத்தை 1537 கோடி ரூபாய்களுக்கு வாங்கிய ஸ்வான் நிறுவனம் அதை வெறுமனே கைமாற்றி 4200 கோடிகள் கொள்ளை லாபம் சம்பாதித்துள்ளது. 22 மண்டலங்களை 1,658 கோடி ரூபாய்க்குப் பெற்ற யூனிடெக் நிறுவனம், தனது 60 சதவீதப் பங்குகளை 6,100 கோடி ரூபாய்க்கு விற்றிருக்கிறது.

இந்த போலி நிறுவனங்கள் பல அரசியல்வாதிகள், முதலாளிகளுக்கு சொந்தமானவை. இது போக ரிலையன்சு நிறுவனமும் பினாமி பெயரில் அடித்து சென்றிருக்கிறது. மற்றபடி சந்தை மதிப்பை விட கொள்ளை மலிவில் பிக்பாக்கட் அடித்தவர்களில் ஏர்டெல், ஏர்செல், வோடாபோன் என எல்லா நிறுவனங்களும் உண்டு.

ராசாவுக்கு பின்னே மறைந்து கொள்ளும் முழு பெருச்சாளிகள்!
இந்திய ஊழல் தொகையின் பதினேழாண்டு மதிப்பு 73 இலட்சம் கோடி ரூபாய்கள்!!

ஊழல் நடந்துள்ளது என்பது சர்வநிச்சயமாக எல்லோருக்கும் தெரிந்தே தான் இருக்கிறது. இதற்குப் பெரிதாக மூளையைப் போட்டுக் கசக்கிக் கொள்ளத் தேவையே இல்லை. ஒரு பொருளுக்கான தேவை 100 மடங்குக்கும் மேல் அதிகரித்துள்ள நிலையில், அதை ஏழு வருடங்களுக்கு முன்பு விற்ற அதே விலையில் விற்றதில் ஊழல் நடந்துள்ளது என்பதை பத்தாம் வகுப்பு படிக்கும் சிறுவன் கூட சொல்லி விடுவான். ஆனால், இதற்கெல்லாம் காரணமாக எல்லோராலும் கைகாட்டப்படுவது ஆ.இராசா மட்டும் என்பதில் தான் சூட்சும்ம் ஒளிந்திருக்கிறது.

கிராமப்புறங்களில் ஒரு வழக்கு உண்டு, கூட்டத்தில் நிற்கும் திருடன் – ‘அதோ திருடன்; இதோ திருடன்’ என்பானாம். இன்று சர்வ கட்சிகளும் போடும் கூச்சல்களும் அசப்பில் அப்படியே தான் உள்ளது.

அவுட்லுக் பத்திரிகை கணக்கெடுப்பு ஒன்றின் படி 1992ஆம் ஆண்டிலிருந்து 2009ஆம் ஆண்டு வரையில் இந்தியாவில் நடந்துள்ள மொத்த ஊழலின் மதிப்பு 73 லட்சம் கோடி ரூபாய்கள்! அதாவது – 73000000000000 ( எழுபத்தி மூன்று போட்டு பன்னிரண்டு சைபர்களையும் போட வேண்டும்!) ( தகவல் -http://www.outlookindia.com/article.aspx?262842 ).

இந்தாண்டு இந்தியா பட்ஜெட் பற்றாக்குறைக்காக வாங்கியுள்ள அதிகாரப்பூர்வ கடனே மூன்று லட்சத்து நாற்பத்தையாயிரம் கோடிகள் தான். என்றால், இந்த ஊழல் பணத்தைக் கொண்டு எத்தனை ஆண்டுகளுக்கு பற்றாக்குறையில்லாத பட்ஜெட் போட்டிருக்க முடியும்? நமது மொத்த உள்நாட்டு உற்பத்தியான 53 லட்சம் கோடிகளை விட இது 27% அதிகமாம்.

இதெல்லாம் இந்த நாட்டின் செல்வங்கள், வளங்கள், மக்கள் பணம் என்று கொள்ளை போன வகையில் கணக்கில் வரும் தொகை. இன்னும் வெளியாகாத குற்றச்சாட்டுகள் எத்தனை, ‘விஞ்ஞானப்பூர்வமான’ நடந்த ஊழல்களின் மதிப்பு எவ்வளவு இருக்கும் என்பதையெல்லாம் கணக்குப் போட்டுப் பார்த்தால் தலையே சுற்றுகிறது. எந்த உலகமயமாக்கம் நல்லாட்சியைத் தரும் என்று உலகமய தாசர்கள் பீற்றிக் கொள்கிறார்களோ அந்த உலகமயத்திற்குப் பின் தான் இத்தனையும் நடந்துள்ளது.

இங்கே அடிக்கடி அதியமான் வந்து ‘உலகமயம் தனியார்மயம் தாராளமயம் நிறைய ‘வாய்ப்புகளைத்’ திறந்து விட்டிருக்கிறது’ என்று வாதாடியதைப் பார்த்திருக்கிறோம். பொதுவான வாசகர்களுக்கு அதன் மெய்யான அர்த்தம் ஒருவேளை புரிந்திராமல் இருக்கும் – இப்போது தெரிந்து கொள்ளுங்கள், அந்த ‘வாய்ப்புகள்’ இந்த பன்னிரண்டு சைபர்களுக்குள் தான் எங்கோ பதுங்கிக் கிடக்கின்றன.

கடந்த இரு பத்தாண்டுகளில் ஒவ்வொரு முறை ஊழல் குற்றச்சாட்டுகள் எழும் போதும் ஊடகங்கள் அதைவைத்து ஒரு வாரம் பத்து நாளைக்கு நோண்டி கொண்டாடி விட்டு பின் மீண்டும் நடிகர்களின் படுக்கையறைகளுக்குள் பதுங்கிக் கொள்கின்றன. எதிர்கட்சிகளின் கூச்சல்களும், “நமக்குக் கிடைக்காதது இவனுக்குக் கிடைத்து விட்டதே” என்கிற பொறுக்கித் தின்னும் ஏக்கத்தின் வெளிப்பாடுகள் தான். அதைத் தான் விஜயகாந்த் ஓரளவு நேர்மையுடன் “எங்களுக்கும் ஒரு வாய்ப்புத் தாருங்களேன்” என்று கேட்கிறார். சிறிய அலையை பெரிய அலை விழுங்குவதைப் போல் ஒரு ஊழல் ஏற்படுத்திய அதிர்ச்சியை அடுத்த ஊழல் விழுங்கி விடுகிறது.

இதெல்லாம் கருணாநிதியின் செல்லமான அடிமைப் பிள்ளை ஆ.இராசாவுக்கு சர்வ நிச்சயமாகத் தெரியாமல் இருக்காது. அதனால்தான் அவரால் கொஞ்சமும் அலட்டிக் கொள்ளாமல் “ஊழல் நடந்துள்ளதை நிரூபித்துப் பாருங்களேன்” என்று தைரியமாக சவடால் அடிக்க முடிகிறது. இன்னும் ஒரு படி மேலே போய் “எல்லாம் பிரதமருக்குத் தெரியும்; பிரதமரின் வழிகாட்டுதலின் பேரில் தான் மொத்த விற்பனையும் நடந்தது” என்று சொல்கிறார்.

தேசத்தின் வளங்களை கேள்விமுறையில்லாமல் பன்னாட்டுக் கம்பெனிகளுக்கு தாரை வார்த்துக் கொடுப்பது தான் உலகமயமாக்கல் அரசிடம் கோரி நிற்கும் செயல்பாடு. அதைத் தான் அவர்கள் வேறு வார்த்தைகளில் சொல்கிறார்கள், ‘அரசு நிர்வாகத்தை மட்டும் பார்த்துக் கொள்ள வேண்டும்; வியாபாரத்தை முதலாளிகள் பார்த்துக் கொள்வார்கள்’ என்கிறார்கள். அதன் மெய்யான அர்த்தம், “நீ பங்கு பிரித்துக் கொடுப்பதோடு மட்டும் நிறுத்திக் கொள்; மற்றதை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்” என்பதாகும்.

ஸ்பெக்ட்ரம் என்பது பௌதீகமாக கண்டுணர முடியாத வளம்; ஆனால், நாம் பௌதீகமாக கண்டுணர்வதோடு, நமது வாழ்க்கைக்கான ஜீவாதாரத் தேவையான நீர் வளத்தையே பட்டா போட்டுக் கொடுத்து விட்ட ஒரு நாட்டில், அதையே செயல்திட்டமாகக் கொண்ட ஒரு உலகவங்கியின் கைக்கூலி ஆட்சி செய்யும் போது, ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் வருமான இழப்பு ஏற்படுத்தினார் என்று அதுவும் வேறுவழியின்றி தணிக்கை அறிக்கை வெளிவந்த பிறகு ஒரு இராசாவை தள்ளிவிட்டுவிட்டு மற்ற பெருச்சாளிகள் தப்பிக்க பார்க்கிறார்கள்.

தி.மு.கவின் பாரம்பரிய அரசியல் உத்தியான “நீ மட்டும் என்ன யோக்கியமா” என்கிற கேள்வியை இராசா திருப்பிக் கேட்டுவிட்டால் அங்கே காங்கிரசுக்கு கிழிசலோடு ஒட்டிக் கொண்டிருக்கும் அந்தக் கடைசிக் கோவணத்துண்டும் அவிழ்ந்து விடும் அபாயம் இருக்கிறது. அதன் ஒரு சின்ன சாம்பிள் தான் “எல்லாம் பிரதமரின் வழிகாட்டுதல் தான்” என்று உண்மையைச் சொல்வது. எனவே ஓரளவுக்கு மேல் இறுக்கிப் பிடிக்க மாட்டார்கள் என்று எதிர்பார்க்கலாம். அலைக்கற்றை ஒதுக்கீட்டில் தி.மு.க சார்பான அலாவுதீன் என்ற பினாமிக்கு பங்கு இருப்பதை விட காங்கிரசு ஆதரவு முதலாளிகளின் பங்கு அதிகம். தேனெடுத்து புறங்கையை நக்குவதல்ல இது. தேனிக்கள் வாழும் முழுக்காட்டையும் தின்று விழுங்குவது.

இதோ, இப்போதே தயாநிதி அழகிரியின் திருமண வரவேற்பிற்கு காங்கிரசு உள்ளிட்ட அனைத்து கட்சி மத்திய மற்றும் மாநில பெருச்சாளிகள் வரிசை கட்டியிருக்கிறார்கள். இப்போதைக்கு ஆ.இராசாவை இராஜினாமா செய்ய வைத்திருப்பது விவகாரத்தை முடிந்த வரைக்கும் ஆ.இராசா மட்டும்சம்பந்தப்பட்டது போல மடைமாற்றிக் காட்டவே. மற்றபடி காங்கிரசு இதில் காட்டப் போகும் நாடகமான “தீவிரம்” என்பது மாநிலக் கூட்டணிக் கணக்குகளை வைத்தே தீர்மானிக்கப்படும்.

நாட்டை விற்கும் கூட்டுக் களவாணிகள்!

ஊடகங்களைப் பொறுத்த வரையில், கதையில் ஒரு வில்லன் வேண்டும்; அவன் தோற்க வேண்டும். கடந்த பல பத்தாண்டுகளாக இந்தியாவில் நடந்து வரும் இந்த ‘ஊழல்’ மெகா சீரியலின் இப்போதைய எபிசோடில் வில்லன் ஆ.இராசா. அவர் அமைச்சர் பதவியை இராஜினாமா செய்ததன் மூலம் தோற்று விட்டார். இதை இன்னும் ஒரு பத்து நாட்களுக்கு கொண்டாடுவார்கள். பின்னர் அனைத்தும் மறக்கப்படும்; மறக்கடிக்கப்படும். அடுத்து இன்னும் சில மாதங்களில் வேறு ஏதாவது இரண்டு லட்சம் கோடி ஊழல் ஒன்று வெளிப்படும் நாளில் டி.ஆர்.பி ரேட்டிங்கை உயர்த்த என்ன உத்தியைக் கடைபிடிக்கலாம் என்று விவாதிப்பதில் அவர்கள் ‘பிஸியாகி’ விடுவார்கள். இதற்கிடையே அந்த 1.76 லட்சம் கோடிகளின் கதி? அது வழக்கம் போல என்றென்றைக்கும் திரும்பி வரவே போவதில்லை.

மேலே உள்ள அந்த எழுபத்தி மூன்று லட்சம் கோடிகளும் திரும்ப தேசத்திற்குக் கிடைத்து விட்டதாகவோ அல்லது அதில் இருந்து ஒரு குண்டூசி முனை அளவுக்காவது திரும்பி வந்தது என்பது போன்ற தகவல்களோ இல்லவே இல்லை.

முன்பு வி.எஸ்.என்.எல் நிறுவனத்தை அடிமாட்டு விலைக்கு டாடாவுக்கு தாரை வார்த்துக் கொடுத்த போது என்ன விளைவு ஏற்பட்டதோ, லாபத்தில் இயங்கிய மாடர்ன் பிரட்டை யுனிலீவருக்கு சல்லிசாக அள்ளிக் கொடுத்த போது என்ன விளைவு ஏற்பட்டதோ, அரசுத் துறை அலுமினிய உற்பத்தி நிறுவனமான ‘பால்கோ’வின் பங்குகளை குறைவாக மதிப்பிட்டு ஸ்டெர்லைட்டுக்கு விற்று நாட்டுக்கு இழப்பை ஏற்படுத்திய போது என்ன விளைவுகள் ஏற்பட்டதோ, நல்ல லாபத்தில் இயங்கி வந்த இந்துஸ்தான் டெலி பிரிண்டர்ஸ் நிறுவனத்தின் மதிப்பைக் குறைத்து விற்று நாட்டுக்கு இழப்பை ஏற்படுத்திய போது என்ன விளைவுகள் ஏற்பட்டதோ – அதே போன்ற விளைவு தான் ஸ்பெக்ட்ரம் முறைகேட்டிற்கும் ஏற்படும்.

அது என்னவென்று கேட்கிறீர்களா? மௌனம். ஆழ்ந்த மௌனம். வெட்கம் கெட்ட மௌனம். கேடு கெட்ட மௌனம். வேறெந்த விளைவும் ஏற்படப் போவதில்லை. ஊடகங்களின் இப்போதைய ஆர்வமெல்லாம் அந்த ஒருலட்சத்து எழுபத்தாறாயிரம் என்ற பெரிய எண்ணிக்கை ஏற்படுத்தும் அதிர்ச்சி மதிப்பீட்டில் இருந்து நேயர்களிடையே எத்தனைக்கு எத்தனை அறுவடை செய்ய முடியும் என்பதில் தான்.

ஸ்பெக்டரம் ஊழலும், அரசியல் கட்சிகளின் கூட்டணி கனவுகளும்!

இன்றைக்கு ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டை எதிர்க்கும் பாரதீய ஜனதா ஆட்சியில் தான் பொதுத்துறை நிறுவனங்களையும் தேசத்தின் இயற்கை வளங்களையும் பன்னாட்டுக் கம்பெனிகளுக்குத் தாரை வார்க்க தனியாக ஒரு அமைச்சரையே வைத்திருந்தனர். இன்றைக்கு எந்த கணக்குத் தணிக்கைத் துறையின் அறிக்கையை கைகளில் வைத்துக் கொண்டு பாராளுமன்றத்தில் கூச்சல் போட்டுக் கொண்டிருக்கிறார்களோ, அதே கணக்குத் தனிக்கைத் துறை 2006ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் சமர்பித்த அறிக்கை ஒன்றில் 1999ம் ஆண்டு முதல் 2003ம் ஆண்டு வரையிலான பாரதீய ஜனதா ஆட்சிக்காலத்தில் ஒன்பது பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்குத் தாரை வார்த்ததில் நடந்த முறைகேடுகளை பட்டியலிட்டு விபரமாக அறிக்கையும் சமர்பித்திருந்தனர்.

தற்போது கூட்டு பாராளுமன்ற உறுப்பினர்களின் விசாரணைக்கு கூக்குரலிடும் பா.ஜ.கவின் கோரிக்கை தேவையில்லை என்பதை அருண் ஷோரியே தெரிவித்திருக்கிறார். முந்தைய பா.ஜ.க அரசில் பொதுத்துறைகளை அடிமாட்டு விலைக்கு அனுப்பிய புண்ணியவான் இவர்தான். அதனால்தான் அவர் ‘நீதி’வழுவாமல் பேசுகிறார்.

அ.தி.மு.கவுக்கு ஒரே பிரச்சினை தான் – அது கூட்டணி. அது கொலைகாரனோ, கொள்ளைக்காரனோ, கேப்மாரியோ, மொள்ளமாரியோ… எவனாக இருந்தாலும் சரி. தமிழகத்தில் குத்து மதிப்பாக பத்து சதவீதம் வாக்குகள் இருக்கும் கட்சியாக காங்கிரசு இருப்பதால், இதை வைத்து எப்படியாவது தி.மு.கவை கழட்டி விட்டு தன்னோடு காங்கிரசு சேர்ந்து விடாதா என்று ஏங்குகிறார். மற்றபடி ஸ்பெக்டரம் ஊழலெல்லாம் அம்மணியின் பேராசைக்கு முன்னே கால் தூசு.

போலி கம்யூனிஸ்டுகளைப் பொறுத்தவரை ஆ.இராசா விலக வேண்டும் – விலகியாச்சு. பாராளுமன்றக் கூட்டுக் கமிட்டி வேண்டும் – அதுவும் கொஞ்ச நாள் பிகு பண்ணி விட்டு காங்கிரசு அமைத்துக் கொடுத்து விடும். அந்தக் ‘கூட்டில்’ பா.ஜ.கவும் இருக்கும்; எல்லாம் ஒரே மலக்குட்டையில் முழுகி முத்தெடுத்த பன்றிகள் தானே… எனவே காங்கிரசுக்கு ஒரு பாராளுமன்றக் கூட்டுக் கமிட்டியை அமைத்து விடுவதனால் பெரிதாக ஒன்றும் இழப்பு இல்லை… உச்ச நீதிமன்றத்தில் வழக்கு வேறு நடக்கிறது; எப்படியும் “சட்டம் தனது கடமையைச் செய்யும்” – அந்தக் ‘கடமை’ என்னவென்பது அரசியல் அணிசேர்க்கைகளின் அடிப்படையில் தீர்மானிக்கப்படும்.

ஆனால், இவர்கள் யாருமே தவறியும் கூட 2ஜி ஏலத்தை மீண்டும் நடத்த வேண்டும் என்றோ, அடிமாட்டு விலைக்கு வாங்கி லாபம் பார்த்தவர்களிடம் இருந்து பணத்தைப் பறிமுதல் செய்ய வேண்டும் என்றோ, அந்த 1.76 லட்சம் கோடியை கைபற்ற வேண்டும் என்றோ சொல்ல வில்லை என்பது தான் நாம் கவனத்தில் கொள்ள வேண்டியது. மட்டுமல்லாமல், இந்த ஊழலுக்கு மிக அடிப்படையாய் இருக்கும் உலகமயமாக்களைப் பற்றியோ, இப்படி வளங்கள் கொள்ளை போய் நாடு மீண்டும் காலனியாவதைப் பற்றியோ கூட எவரும் வாயைத் திறக்கவில்லை.

இப்போது ட்ராய் ஏதோ நடவடிக்கை எடுக்கப்போவதாக செய்திகளைக் கசியவிடுகிறார்கள்; அதுவும் எப்படியாம்…? ஒரு நிறுவனம் லைசென்சை எடுத்து விட்டு சேவை அளிப்பதில் தாமதப்படுத்தினால் மிகப் பெரிய அளவில் “அபராதம்” விதிக்கப்போகிறார்களாம். அந்த அபராத விபரம் என்ன தெரியுமா? லைசென்ஸை எடுத்த நிறுவனம் முதல் ஆண்டுக்குள் குறைந்தபட்சம் 10% சேவையை அளிக்கத் துவங்கியிருக்க வேண்டும். தாமதமாகும் முதல் 13 வாரங்களுக்கு 5 லட்சம் அபராதமாம், அடுத்த 13 வாரத்துக்கு 5 லட்சம் அபராதமாம்; இப்படி லட்சக்கணக்கில் அபராதம் விதிக்கப் போகிறார்களாம். ஸ்வான் என்கிற நிறுவனம் மட்டுமே லைசென்சை வாங்கி இந்தக் கையில் இருந்த அந்தக் கையில் மாற்றிய வகையில் 4200 கோடிகள் அடித்திருக்கிறார்கள்; அவர்களுக்கு இந்த அபராதமெல்லாம் சும்மா கொசு கடித்தது போலத் தான்.

இதற்கிடையே டிராயின் இந்த அறிக்கை வந்தவுடன் ஸ்வான் நிறுவனம் தான் லைசென்சு எடுத்த எல்லா சர்கிளிலும் சேவையை ஆரம்பித்து விட்டதாக அறிவித்து, அரசையும் மக்களையும் பார்த்து “பப்பி ஷேம்” பாடியுள்ளது தனிக் கதை. ( தகவல் - http://in.biz.yahoo.com/101113/50/bawixo.html)

ஸ்பெக்டரம் ஊழல் இல்லையாம், தொழிலதிபர் பத்ரியின் ஆதங்கம்!

பொதுவாக ஸ்பெக்ட்ரம் ஊழல் குறித்து பதிவுலகில் நிலவும் மனப்போக்கிற்கு எதிராக கிழக்கு பதிப்பகத்தின் அதிபரான பத்ரி சில கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.

அவர் இந்த 1.76 லட்சம் கோடிகளும் இல்லாத பணம் என்றும்; அதற்குள் அது ராசாவின் ‘பைக்குள்’ போய் விட்டதைப் போல் மக்கள் பேசுவதாகவும் குறிப்பிடுகிறார். இதை தம்மால் ஒரு ஊழல் விவகாரமாகக் காண முடியவில்லை என்கிறார். ஆனால், ஸ்பெக்ட்ரம் என்பது பௌதீகமாக காண முடியாவிட்டாலும் அது ஒரு நாட்டின் இயற்கை வளம் தான். ஒரு சரக்கை திட்டமிட்டு சந்தை விலையை விட குறைத்து விற்பதால் ஏற்படும் நட்டத்தை ஊழல் என்று சொல்லாமல் வேறு எப்படிச் சொல்வது? அந்த 1.76 லட்சம் கோடிகளும் இல்லாத பணம் தான்; ஆனால் இருந்திருக்க வேண்டிய பணம்!

அடுத்து இந்தத் தொழிலில் ஈடுபடும் கம்பெனி, லைசென்ஸ் பெற்றதோடு நில்லாமல் அதை வைத்து லாபம் சம்பாதிக்க இருக்கும் நீண்ட ப்ராசஸ் பற்றி சொல்கிறார். என்னவோ மேற்படி கம்பெனிகளின் முதலாளிகள் நெற்றி வியர்வை நிலத்தில் சிந்தி பாடுபட்டு லாபம் பார்ப்பது போல ஒரு பில்டப்பு அதில் தொனிக்கிறது – இதை ஏதோ ஒரு பெட்டிக்கடை சிறு முதலாளியின் உழைப்புக்கு ஈடானதொன்றாக அம்முதலாளிகளின் ‘உழைப்பை’ எடுத்துக் கொண்டு விடலாகாது.

இத்துறையில் எந்தவித முன் அனுபவமும் இன்றி, போலியான ஆவணங்களைக் கொடுத்தும், மோசடியான முறைகளைப் பின்பற்றியும் எடுத்த லைசன்ஸை சும்மா கைமாற்றிய வகையிலேயே அவர்கள் லாபத்தைப் பார்த்து விட்டார்கள். அடுத்து, செல்போன் சேவைகளின் மூலம் மக்களிடம் அடிக்கப் போகும் பிக்பாட்டின் மதிப்பெல்லாம் தனிக் கணக்கு.

பத்ரி, அவரது முந்தைய பதிவு ஒன்றில், “ஸ்பெக்ட்ரம் (அலைப் பரவல்) என்பது மிக முக்கியமான வளம். கனிம வளங்களைப் போல, நிலத்தைப் போல, இதுவும் மிக முக்கியமானது.” என்று குறிப்பிட்டு விட்டு, தொடர்ந்து – “இதனை எப்படிப் பயன்படுத்துவது என்பதில் எப்பொதுமே கொள்கைக் குழப்பங்கள் இருக்கத்தான் செய்யும்.” – என்றும் சொல்கிறார்.

தேசத்தின் வளம் ஒன்றை பயன்படுத்துவதில் என்ன குழப்பம் இருக்க முடியும்? அதைக் கொள்ளையடிப்பதில் உள்ள போட்டியும் மூர்க்கமும் பத்ரிக்கு குழப்பமாக தெரிகிறது. ஒன்று அதை நேரடியாக அரசுக் கட்டுப்பாடில் இருக்கும் நிறுவனம் பயன்படுத்த வேண்டும்; அல்லது அதை தனியாருக்கு விற்பதாக இருந்தால், அரசு நடத்தினால் கிடைக்கப் போகும் லாபத்தையோ அல்லது அதை வாங்கும் நிறுவனம் நடத்தினால் வரும் லாபத்தில் கணிசமான பங்கையோ கட்டணமாக நிர்ணயித்திருக்கலாமே? இப்படி அடிமாட்டு விலைக்கு; அதுவும் மோசடியான முறையில் விற்பதன் அடிப்படை என்ன?

இதற்கு மேல் பத்ரி கூறும் விசயமென்றால் செல்பேசி சேவை மலிவாக இருக்கவேண்டுமென்றால் அலைக்கற்றை ஒதுக்கீட்டை மலிவாகத்தான் விற்க முடியுமாம். ஆக மக்களுக்கு மலிவு சேவை கிடைப்பதை வைத்து பார்த்தால் இதில் ஊழல் என்று எதுவும் இல்லையாம். சரி, இருக்கட்டும்.

பத்ரி ஐயாவுக்கு புரியும் வித்த்தில் ஒரு சான்றைப் பார்ப்போம். தாமிரபரணியின் தண்ணீரை ஆயிரம் லிட்டருக்கு ஐந்து காசு என்ற வீதத்தில் அரசு கோகோ கோலாவிற்கு விற்கிறது என்று வைப்போம். அதை கோகோ கோலா மினரல் வாட்டராக பாட்டிலில் அடைத்து லிட்டருக்கு பத்து ரூபாய்க்கு விற்கிறது என்றால், பத்ரி என்ன கூறுவார்? “மக்களுக்கு குடிநீர் அதுவும் தரமான தரத்தில் மலிவாக கிடைக்க வேண்டுமென்றால் கோகோ கோலாவுக்கு அரசு மலிவாக தண்ணீர் விற்க வேண்டும். அது ஊழல் இல்லை.” பத்ரி அண்ணே சரிதானே?

முதலாளிகளின் மோசடி இலாபம் என்ற கொள்ளையடிக்கப்பட்ட பொருள் பத்ரியின் கண்ணுக்கு மட்டும் மக்களுக்கு கிடைக்கும் மலிவான சேவை என்று தெரிவதற்கு காரணம் அண்ணன் பத்ரி சக முதலாளியாக இருந்து ஒரு முதலாளியின் ‘துயரத்தை’ பகிர்ந்து கொள்கிறார் என்பதே. ஸ்பெக்ட்ரம் ஊழலில் கூட ராசாதான் பேசப்படுகிறாரே ஒழிய அவருக்கும் அல்லா கட்சிகளுக்கும் கட்டிங் வெட்டிய முதலாளிகளைப் பற்றி யாரும் பேசுவதில்லை. இந்த ஊழல் குறித்து இதுவரை இந்திய முதலாளிகளின் சங்கங்கள் எதுவும் மூச்சுக் கூடவிடவில்லை.

மறுகாலனியாக்கத்திற்கு எதிராக மக்கள் போராடும் போதே ஊழல் பெருச்சாளிகளை வேட்டையாட முடியும்!

ஸ்பெக்ட்ரம் ஊழலின் அடிப்படை இந்த அரசின் அமைப்பில் இருக்கிறது. இந்த அரசியல் அமைப்பே தேச நலனையும் வளங்களையும் பன்னாட்டுக் கொள்ளைக்காரர்கள் கொள்ளையிட்டுச் செல்ல உதவும் தரகு வர்க்கத்தால் நிர்வகிக்கப் படுகிறது. அதற்கு காங்கிரசும், பாரதீய ஜனதாவும் இன்ன பிற கட்சிகளும் அடியாள் வேலை செய்கிறது.

பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் இங்கே ஒரு வைசிராய் இருந்தார் – அவருக்கு பொன்னிற முடியும் வெள்ளைத் தோலும் இருந்தது. இப்போது இருக்கும் வைசிராய்களுக்கு அந்த அடையாளங்கள் இல்லை. அந்த ஒரு வித்தியாசத்தைத் தவிர்த்து வேறெந்த வித்தியாசமும் இல்லை. இதைத் தான் மறைமுக காலனியாதிக்கம் – மறுகாலனியாதிக்கம் – என்கிறோம்.

வல்லரசு நாடுகளுக்கு இந்தியாவை கூறு போட்டு விற்கும் இந்த அரசமைப்பைக்கும் அதன் அடியாட் படைக்கும் எதிராக நாட்டு மக்கள் தொடுக்கும் போராட்டம் மட்டுமே ஸ்பெக்ட்ரம் ஊழல் பெருச்சாளிகளை தண்டிக்கும். அந்த களப்பணியில் இணைவது மட்டுமே இந்த ஊழலுக்கு நாம் காட்டும் உண்மையான எதிர்ப்பாக இருக்க முடியும்.

thanks

post by Vinavu

http://www.vinavu.com/2010/11/19/2g-spectrum-scandal/_______________________________

_

Sunday, November 21, 2010

scientific திருடர்கள் இந்த வார்த்தை சோ பேசும் பொழுது சொன்னது

scientific திருடர்கள் இந்த வார்த்தை சோ பேசும் பொழுது சொன்னது


உண்மை தான் தான் திருடிய தை தானே கண்டு பிடிக்க முடியாத திருட்டுக்கு இந்த வார்த்தை பொருந்தும்
முதலில் சேது சமுத்திர கால்வாய் இதை திருப்தியாக பாலு முடித்து விட்டார் இதில் எத்தனை கோடியோ முழு பணத்தையும் கடலுக்கடியில் கால்வாய் தோண்டி புதை தாகி விட்டது அதில் சில காங்கிரஸ் காரர்கள் கோபம்
இந்த முறை மத்திய அமைச்சர் ஆக முடியவில்லை

இந்த முறை ராஜா கடந்த 15 நாட்களை தலைப்பு செய்தி அனல் பறக்கும் விவாதங்கள் அனால் இது வரை ஒன்றும் செய்ய முடியவில்லை காரணம் scientific திருடர்கள் தாங்களாக திருடினால் தான் திருட்டு அனால் இந்த மொத்த பணத்தையும் ராஜா வாங்க வில்லை இது தான் உண்மை .இந்த பணம் எங்கு எங்கு எப்பா எப்ப போய் சேரனுமோ கரெக்டா போய் சேருந்துருக்கு அது இப்ப தான் கூட இருந்த காங்கிரஸ் காரர்களுக்கு தெரிந்துற்கு
இவ்வளவு நடந்தும் நம்ம ஊர் டிவி ,பேப்பர் ஒண்ணும தெரியாம இருக்கறது போல இருக்கு பாருங்க அது தான் நம்ம பிளஸ் பாயிண்ட் ,இந்தியா புல்ல எல்லா மீடியாவிலும் தலைப்பு செய்தியாக வெளியிடுவது நம்ம ஊர் பேப்பர்ரில் பெட்டி செய்தியாக வருகிறது நம்ம தினமணி மட்டும் கொஞ்சம் நேர்மைய நடக்கிறது என்பது தமிழனுக்கு கிடைத்த பெருமை
முதலில் இந்த உரையாடல்களை கேட்டு விட்டு காத்திருங்கள் .அடுத்த பதிவிற்கு



Thursday, May 6, 2010

டெலிகாம் ராஜா இது உங்களது குரல்தான் என்கிறது ஆங்கில செய்தி

டெலிகாம் ராஜா இது உங்களது குரல்தான் என்கிறது ஆங்கில செய்தி

ராஜா மற்றும் நீரா ராடிய பேசிய 50 மணி நேர ஒழி பதிவை நேற்று இரவு ஒளிபரப்பி திமுக வயிற்றில் புலியை கரைத்து விட்டது ஆங்கில செய்திசெனல்

இனி திமுக டெலிகாம் ஊழல் நடைபெறவில்லை என்று சொல்லமுடியாது எல்லாம் வேட்டவேல்லிச்சமகி
விட்டது

Wednesday, April 28, 2010

ஸ்பெக்ட்ரம்: பெண் புரோக்கரின் தொலைபேசி ஒட்டு கேட்பு- ராசாவுக்கு எதிராக ஆதாரங்கள் சிக்கின?

டெல்லி: தொலைபேசி ஒட்டுக் கேட்பு மூலம் 2ஜி ஸ்பெட்க்ரம் விவகாரத்தில் மத்திய தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் ராசாவுக்கு எதிராக முக்கிய ஆதாரத்தை சிபிஐ திரட்டியுள்ளதாகத் தெரிகிறது.

இது தொடர்பாக கொல்கத்தாவிலிருந்து வெளியாகும் 'பயோனீர்' நாளிதழ் வெளியிட்டுள்ள சிறப்புச் செய்தி விவரம்:

பல மக்கள் தொடர்பு ஏஜென்சிகள் நடத்தி வரும் நிரா ராடியா என்ற பெண்ணின் தொலைபேசிகளை ஒட்டுக் கேட்டதன் மூலம் ராசாவுக்கு எதிராக முக்கிய ஆதரங்கள் சிக்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.

வைஷ்ணவி கார்பரேட் கன்சல்டன்ட்ஸ், நோயெசிஸ் ஸ்ட்ராடிஜிக் கன்சல்டிங் சர்வீஸஸ், விட்காம் கன்சல்டிங், நியூகாம் கன்சல்டிங் என பல மக்கள் தொடர்பு ஏஜென்சிகளை நடத்தி வரும் இந்தப் பெண், மாபெரும் நிறுவனங்களுக்கு புரோக்கராக செயல்பட்டு அரசு, அமைச்சர்களுடன் பல டீல்களை முடித்துக் கொடுத்து வருபவர் என்று தெரிகிறது.

இதற்காக தனது கன்சல்டிங் நிறுவனங்களில் ஓய்வு பெற்ற மூத்த மத்திய அரசு அதிகாரிகளைத் தான் பெருமாபாலும் பணியில் அமர்த்தியுள்ளார். அவர்கள் மூலம் அரசு திட்டங்களின் நெளிவு சுளிவுகளை அறிந்து, காய்களை நகர்த்தி காரியத்தை சாதிப்பவர் என்கிறார்கள்.

என்ஆர்ஐயான இந்த ரேடியா கடந்த 2000ம் ஆண்டில் தான் இந்தியாவுக்குத் திரும்பினார். வந்தவுடன் சில விமான போக்குவரத்து நிறுவனங்கள் உள்பட பல நிறுவனங்களுக்கு தொடர்பு அதிகாரியாக பணியாற்றினார்.

ராசாவால் 2ஜி தொலைபேசி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கப்பட்ட 9 நிறுவனங்களில் 4 நிறுவனங்களுடன் ரேடியாவுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது.

இந்த விவரங்கள் தெரியவந்ததையடுத்து ரேடியாவின் தொலைபேசியை சிபிஐ சில காலமாக ஒட்டு கேட்டு வந்தது. இதன்மூலம் அவரது தில்லாலங்கடி வேலைகள் குறித்த விவரங்களும் ஆதாரங்களும் சிபிஐக்கு சிக்கியுள்ளதாகத் தெரிகிறது.

ரேடியா விவகாரத்தில் வருமான வரித்துறையின் உதவியையும் சிபிஐ பெற்றுள்ளது. ரேடியாவின் 9 தொலைபேசிகளை வருமான வரித்துறையின் புலனாய்வுப் பிரிவு கடந்த 2008ம் ஆண்டு ஆகஸ்ட் 20ம் தேதி முதல் 120 நாட்கள் ஒட்டு கேட்டுள்ளது.

இதையடுத்து 2009ம் ஆண்டு மே 11ம் தேதி முதல் 180 நாட்கள் இந்த தொலைபேசிகளை வருமான வரித்துறையினர் ஒட்டு கேட்டுள்ளனர்.

அதே போல மேலும் பல தொழிலதிபர்கள, அரசியல்வாதிகள், விளம்பர நிறுவன அதிகாரிகளின் தொலைபேசிகளும் சிபிஐ, வருமான வரித்துறையால் ஒட்டு கேட்கப்பட்டுள்ளன. இதில் ஸ்பெக்ட்ரம் முறைகேடு குறி்த்து ஏராளமான ஆதாரங்கள் சி்க்கியதாக சிபிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஸ்பெக்ட்ரம் முறைகேடு மூலம் கிடைத்த ஏராளமான பணம் ரியல் எஸ்டேட், நிறுவனங்கள், மொரீசியஸ் உள்ளிட்ட நாடுகளி்ல் முதலீடு செய்யப்பட்டது தொடர்பான விவரங்களும் இந்த ஒட்டு கேட்பு மூலம் வருமான வரித்துறைக்குக் கிடைத்துள்ளதாகத் தெரிகிறது.

கடந்த 2009ம் ஆண்டு நவம்பர் 16ம் தேதி வருமான வரித்துறையின் புலனாய்வுப் பிரிவின் டைரக்டர் ஜெனரல் மிலாப் ஜெயினுக்கு சிபிஐ டிஐஜி வினீத் அகர்வால் எழுதியுள்ள கடிதத்தில், இந்த ஒட்டுக் கேட்பு மூலம் கிடைத்த முழுத் தகவல்களையும் வழங்குமாறு கோரியுள்ளார்.

இதையடுத்து ஜெயினின் உத்தரவுப்படி, நவம்பர் 20ம் தேதி வருமான வரித்துறையின் இணை இயக்குனர் அஷிஷ் அப்ரோல், சிபிஐ டைரக்டர் ஜெனரலுக்கு அனுப்பிய பதிலில், நிரா ராடியாவுக்கும் அமைச்சர் ராசா உள்ளிட்டோருக்கும் இடையே நடந்த தொலைபேசி உரையாடல்களின் முழு விவரத்தையும் விளக்கியுள்ளார்.

அதில், நிரா ராடியா தனக்கு நெருக்கமானவர்களுடன் பேசும்போது, தான் எப்படி பல நிறுவனங்களுக்கு ஸ்பெக்ட்ரம் வாங்கித் தந்தேன் என்பதை விளக்கியுள்ளார்.

மேலும் அமைச்சர் ராசாவுடனும் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டின்போது அவரது தனிச் செயலாளரராக இருந்த ஆர்.கே.சந்தோலியாவுடனும் பல முறை தொலைபேசியில் பேசியுள்ளார்.

இதையடுத்து சந்தோலியா, தொலைத் தொடர்புத்துறையின் ஆலோசகராக பதவி உயர்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் யூனிடெக் வயர்லெஸ் நிறுவனத்துக்கு ஸ்பெக்ட்ரம் வாங்க பெருமளவில் பணத்தை தயார் செய்து தந்ததாகவும் ரேடியா ஒருவரிடம் கூறியதாகவும் வருமான வரித்துறை சிபிஐயிடம் தெரிவித்துள்ளது.

உள்துறைச் செயலாளரின் அனுமதியோடு தான் இந்த தொலைபேசி உரையாடல்கள் ஒட்டு கேட்கப்பட்டன என்பதையும் வருமான வரித்துறை கூறியுள்ளது.

ஆனாலும் ரேடியாவை விசாரிக்க சிபிஐக்கு மத்திய அரசின் மிக மூத்த அதிகாரிகள் அனுமதி தரவில்லை. மேலும் தன்னை சிபிஐ கண்காணிப்பதை தனது தொடர்புகள் மூலம் உணர்ந்துவிட்ட நிரா ராடியா, கடந்த பிப்ரவரி மாதம் ரகசியமாக லண்டனுக்குச் சென்றுவிட்டார். கைதாவோம் என்ற அச்சத்தில் இதுவரை நாடு திரும்பவே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

நாடாளுமன்றத்தில் அமளி-ஒத்திவைப்பு:

இந்த ஸ்பெக்ட்ரம் விவகாரம் இன்று நாடாளுமன்றத்திலும் எதிரொலித்தது.

பாஜக, அதிமுக எம்பிக்கள் இந்த விவகாரத்தை இரு அவைகளிலும் கிளப்பிதால் பெரும் அமளி ஏற்பட்டு ஒத்தி வைக்கப்பட்டன

thanks thats tamil

ஸ்பெக்ட்ரம்: சிபிஐ விசாரணை அதிகாரி திடீர் மாற்றம் ஏன்?- ஜெயலலிதா

சென்னை: ஐபிஎல் விவகாரத்தில் அமைச்சர் சசி தரூர் ராஜினாமா செய்யததைப் போல ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் அமைச்சர் ராசாவும் பதவி நீக்கப்பட வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் குழுவின் கொச்சி உரிமை குறித்த கொடுக்கல், வாங்கல் விவகாரத்தில் பெரும் சச்சரவுக்கு ஆளான மத்திய வெளியுறவுத்துறை இணையமைச்சர் சசி தரூரின் நேர்மை குறித்த சந்தேகத்தையடுத்து, அவரை அந்தப் பதவியிலிருந்து விலகுமாறு மத்திய அரசு அறிவுறுத்தியது எதிர்க்கட்சிகளின் ஒற்றுமைக்கு கிடைத்த மிகப் பெரிய வெற்றி.

தரூரின் குற்றம் நிரூபிக்கப்படவில்லை. இருப்பினும், மிக உயர்ந்த ஜனநாயக மரபுப்படி, தனது பதவியை ராஜினாமா செய்யும் முடிவை அவர் எடுத்தார்.

தவறான கொள்கையை கடைபிடித்ததன் காரணமாக, இந்திய அரசாங்கத்திற்கும், மக்களுக்கும் ரூ. 60,000 கோடி முதல் ரூ.1 லட்சம் கோடி வரை இழப்பை ஏற்படுத்தியதோடு மட்டுமல்லாமல், தன்னுடைய தலைவர் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் மட்டும் அல்லாமல், தனக்கும், தன் உறவினர்களுக்கும், கூட்டாளிகளுக்கும், நண்பர்களுக்கும் தவறான ஆதாயத்தை ஏற்படுத்திய மத்திய தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஆ.ராசாவின் அத்துமீறலையும், அராஜகத்தையும் இந்த நாட்டிற்கும், இந்திய அரசிற்கும், நாடாளுமன்றத்திற்கும் நினைவூட்ட வேண்டியது எனது கடமையாகும்.

ஐ.பி.எல். பங்குகளை விற்பனை செய்வதில் தனது செல்வாக்கை தவறாகப் பயன்படுத்தினார் என்பது தான் சசி தரூர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சா‌ற்று. ஸ்பெக்ட்ரம் விற்பனையில் தன்னுடைய செல்வாக்கை தவறாகப் பயன்படுத்தினார் என்பது ராசா மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சா‌ட்டு.

ஐ.பி.எல். பங்கு விற்பனை என்பது இந்திய கிரிக்கெட் வாரியம் தொடர்பான தனியார் பிரச்சனை. மாறாக ஸ்பெக்ட்ரம் என்பது இந்திய அரசாங்கத்தின், இந்திய மக்களின் சொத்து.

சசி தரூர் ஆற்றிய பணிக்கு, அவருடைய நண்பர் ரூ. 70 கோடி அளவுக்கு உரிமைதாரரிடமிருந்து பயனடைந்தார் என்று குற்றம் சுமத்தப்பட்டிருக்கிறது.

ஆனால், ராசாவால் இந்த நாட்டிற்கு ரூ. 1 லட்சம் கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டு இருப்பதாகவும், இந்த நடவடிக்கையில் அவரது உறவினர்கள், நண்பர்கள், கட்சித் தோழர்கள் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் பயனடைந்து இருப்பதாகவும் ராசா மீது குற்றம் சுமத்தப்பட்டிருக்கிறது.

ஐ.பி.எல். விளையாட்டில் பங்குடைய ஒருவர் தரூருக்கு எதிரான குற்றச்சாட்டுகளை சுமத்தியிருக்கிறார். ராசாவுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை நேர்மை வாய்ந்த கட்சிகள் சுமத்தியுள்ளன.

நாட்டின் முன்பும், நாடாளுமன்றத்தின் முன்பும் தரூர் அவமானப்படுத்தப்பட்டு, பதவி விலகுமாறு கட்டாயப்படுத்தப்பட்டுள்ளார். ஆனால், ராசாவோ தொடர்ந்து மத்திய அமைச்சராக, அதுவும் ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட போது, எந்த இலாகாவுக்கு அமைச்சராக இருந்தாரோ, அதே இலாகாவுக்கான அமைச்சராகவே தொடர்ந்து இருக்கிறார்.

இந்தச் சூழ்நிலையில், திமுகவைச் சேர்ந்த மத்திய தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஆ.ராசா தொடர்புடைய ரூ. 1 லட்சம் கோடி ஸ்பெக்ட்ரம் ஊழல் குறித்த சி.பி.ஐ. விசாரணையை தலைமையேற்று நடத்தி வந்த அதிகாரி வினீத் அகர்வால் திடீரென்று மாற்றப்பட்டுவிட்டார் என்று ஊடகங்களில் வெளிவந்துள்ள செய்தி மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது.

இதன் உள்நோக்கம் வெளிப்படையாக அனைவருக்கும் புரியக் கூடியது தான். மத்திய அரசு திமுகவின் நிர்பந்தத்திற்கு அடிபணிந்து இந்த வழக்கை குழிதோண்டி புதைக்க முடிவு செய்துவிட்டது.

மத்திய கண்காணிப்பு ஆணையம் குற்ற‌ம்ச‌ாட்டியதன் காரணமாகத்தான் ஸ்பெக்ட்ரம் ஊழல் குறித்த சி.பி.ஐ. விசாரணை அவசியமாயிற்று. 2ஜி ஸ்பெக்ட்ரம் விற்பனையில் மத்திய தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஆ.ராசா தவறான முறைகளை பின்பற்றியதன் காரணமாக, மத்திய அரசுக்கு குறைந்தபட்சம் ரூ. 26,000 கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டு இருப்பதாக இந்திய கணக்கு மற்றும் தணிக்கைத் தலைவர் அண்மையில் தனது அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.

“நியாயமான மற்றும் வெளிப்படையான முறையில் ஸ்பெக்ட்ரம் உரிமம் வழங்கப்படவில்லை என்பது முதல் பார்வையிலேயே தெரிகிறது” என்று அந்த அறிக்கையில் கருத்து தெரிவித்திருந்தார். "முதலில் வருபவருக்கு முதலில் ஒதுக்கீடு" என்ற அடிப்படையில் 2ஜி ஸ்பெக்ட்ரம் உரிமம் வழங்கப்படும் என்ற முறையை ராசா பின்பற்றியது “சினிமா டிக்கெட் விற்பனை” போன்று அமைந்துள்ளது என்று இந்த வழக்கை விசாரித்த டெல்லி உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

பிரதமரின் அனுமதியை பெற்ற பிறகு தான் இந்த முரண்பாடுகள் நிறைந்த 2ஜி ஸ்பெக்ட்ரம் விற்பனையை மேற்கொள்ள வேண்டும் என்ற மன்மோகன் சிங்கின் எழுத்துப்பூர்வமான உத்தரவை ராசா வெளிப்படையாகவே மீறியிருக்கிறார்.

ஸ்பெக்ட்ரம் உரிமத்தை ஏலத்தில் விடுவது குறித்து அமைச்சரவை அதிகாரக் குழுவின் முடிவிற்கு விட்டுவிடலாம் என்ற அப்போதைய சட்ட அமைச்சர் எச்.ஆர்.பரத்வாஜின் ஆலோசனையையும் புறக்கணித்திருக்கிறார் ராசா.

நிர்ணயிக்கப்பட்ட தேதியை நியாயமின்றி, தன்னிச்சையாக முன்னுக்கு தள்ளி வைத்த தொலைத் தொடர்புத் துறையின் முடிவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், தொலைத் தொடர்புத் துறையின் முடிவு சட்டவிரோதமானது என்று டெல்லி உயர் நீதிமன்றம் கூறியுள்ளது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து தொலைத் தொடர்புத் துறையால் உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், டெல்லி உயர் நீதிமன்றத் தீர்ப்பை உறுதி செய்துள்ளது.

வலுவான ஆதாரங்கள் இருந்தும், ராசா பதவி நீக்கம் செய்யப்படவில்லை. தற்போது ஸ்பெக்ட்ரம் வழக்கை விசாரணை செய்து கொண்டு இருந்த சி.பி.ஐ. அதிகாரி மாற்றப்பட்டுவிட்டார். எனக்கு கிடைத்த தகவலின்படி, இந்த வழக்கில் சி.பி.ஐ. கணிசமான அளவுக்கு முன்னேற்றம் கண்டிருக்கிறது.

ராசா மற்றும் அவரது சில கூட்டாளிகள், குறிப்பாக நோசிஸ் ஸ்ட்ராடிஜிக் கன்சல்டிங் சர்வீஸஸ் நிறுவனத்தின் தலைவர் நிரா ராடியா, ராசாவுடன் தனக்குள்ள தொடர்பை பயன்படுத்தி பல புதிய தொலைதொடர்பு நிறுவனங்களுக்கு ஸ்பெக்ட்ரம் உரிமங்களை வாங்கிக் கொடுத்ததையும் சி.பி.ஐ. அடையாளம் கண்டிருப்பதாகவும்

ராசாவுக்கும், ஸ்வான் டெலிகாம் மற்றும் யூனிடெக் நிறுவனங்களுக்கும் இடையே உள்ள தொடர்பு சிபிஐயால் கண்டறியப்பட்டுள்ளதாகவும், நிரா ராடியா மற்றும் கனிமொழிக்கும் உள்ள தொடர்பையும் கண்டுபிடித்து, இதன் மூலம், தயாநிதி மாறனை தொலைத் தொடர்புத் துறையிலிருந்து விலக்கி வைக்க சில சக்திகள் ஈடுபட்டது கண்டறியப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது.

சி.பி.ஐ. விசாரணை ராசாவுக்கும், அவரது ஆசான் கருணாநிதிக்கும் மிகவும் பாதகமாக இருந்திருக்கிறது. நிலைமை மிக மோசமாகி, ராசா ராஜினாமா செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டால், திமுக மத்திய அரசுக்கு அளித்து வரும் தன்னுடைய ஆதரவை விலக்கிக் கொள்ள நேரிடும்.

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் நிலைமை விசித்திரமாக இருக்கிறது. ஐ.பி.எல். விவகாரத்தில் முன்னாள் வெளியுறவுத் துறை இணை அமைச்சர் சசி தரூரின் தொடர்பு குறித்த சந்தேகத்தை லலித் மோடி எழுப்பிய போது, இணையமைச்சரை பலிகடா ஆக்கியது.

கூட்டணி என்று வரும் போது, கூட்டணிக் கட்சிகளின் அச்சுறுத்தலுக்கு அடிபணியவோ அல்லது அதிகாரத்தை தியாகம் செய்யக்கூடிய நிலைக்கோ ஐக்கிய முற்போக்கு கூட்டணி தள்ளப்படுகிறது.

இது வெறும் 'பொது வாழ்வில் நேர்மை' குறித்த பிரச்சனை அல்ல. இந்த நாட்டிற்குச் சேர வேண்டிய சுமார் ரூ. 1 லட்சம் கோடியை கொள்ளையடித்த பிரச்சனை.

தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு குடும்பத்திற்கும் தனித் தனி வீடுகளை கட்டித் தருவதற்கு இந்தப் பணத்தை ஒதுக்கியிருக்கலாம்.

இந்த நாடே விலை போவதற்கு முன்பு, இந்த தேச சுரண்டலை தடுத்து நிறுத்த வேண்டும் என்று, சசி தரூரை ராஜினாமா செய்ய வைப்பதில் ஒற்றுமையாக இருந்த எதிர்க்கட்சிகளும், ஐ.பி.எல். ஊழல் குறித்து விழிப்புடன் செயல்பட்ட ஊடகங்களும் மற்றும் இந்த நாட்டின் பொதுமக்களும் முன்வர வேண்டும்.

மத்திய அமைச்சராக உள்ள ராசா பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும்.
வினீத் அகர்வால் சி.பி.ஐ. விசாரணைக் குழுவின் தலைவராக திரும்ப பணியமர்த்தப்பட வேண்டும். சட்டம் தன் கடமையை செய்ய அனுமதிக்கப்பட வேண்டும் எ‌ன்று கூ‌றியு‌ள்ளா‌ர் ஜெயலலிதா

thanks
thats tamil

Saturday, March 6, 2010

தமிழ் மாநாட்டுக்கு தமிழ்படத்தின் பாட்டு தலைப்பு பாட்டாக வைக்கப்படும்

தமிழ் மாநாட்டுக்கு தமிழ்படத்தின் பாட்டு தலைப்பு பாட்டாக வைக்கப்படும்

கோயம்பத்தூரில் நடக்க இருக்கும் தமிழ் மாநாட்டுக்கு நமது தமிழகத்தின் தமிழ் வளர்த்த பெரியவர்கள் வருகை தருகிறார்கள் அங்கு நடக்கும் தமிழ் தாய் வாழ்த்து முடிந்தவுடன் தமிழ்படத்தில் தமிழ்ழில் மிக பிரபலமாக எழுத பட்டுள்ள பாட்டை

http://www.youtube.com/watch?v=pn_1PIVmYog( பாட்டை தெரிந்து கொள்ள இங்கு கிளிக் செய்யவும் )


விவரிக்க சுமார் 104 பேர் கொண்ட கமிட்டி வைத்து ஆராயப்படும் என்று தெரிகிறது .இதை ஆராய்ச்சி முடிந்த பின் இந்த பாட்டில் உள்ள பாடல் வரிகள் எல்லாம் தமிழ்தான்
இந்த பாட்டை தமிழகத்தின் தமிழ் தாய் வாழ்த்தாக வைக்கப்படும் என்றும் தெரிகிறது (பாடலை தமிழ் தாய் வாழ்த்தாக வைத்தாலும் வைப்பார்கள் ,ஏற்கனவே தமிழ் மாதம் சித்தரை கிடையாது ,தை மாதத்தை தமிழ் மாதமாக மாற்றிவிட்டார்கள் )

பதிவன்பர்கள்கு இந்த படத்தை நிறைய பேர் கடலை போட்டு விட்டர்கள் இந்த படம் பார்த்தவர்கள் தயவு செய்து இந்த பாட்டின் அர்த்தம் எழுதவும் நானும் பலமுறை கேட்டு விட்டேன் ஒன்றுமே புரியவில்லை ஆகவே தெரிந்து வைத்து கொள்ளவும் தமிழ் மாநாடு நடை பெரும் பொழுது நமது பரிந்துரையை பரிந்துரைப்போம் .

Friday, March 5, 2010

யார் குற்றவாளி சன் டிவியா அல்லது நித்யனந்தரா

நான் நித்யநந்தர்
மனித மனங்களுக்காக (இந்த பதிவு பெரியவர்கள்கு மட்டும் )





என்னை பற்றி சன் டிவி இவ்வளவு புகழ் கூறியதில் ஒரே நாளில் இவ்வளவு பெயர் கிடைத்தது பெருமையாக இருக்கிறது ,என் அந்தரங்க விஷயங்களை வெளியிட்டதற்கு நான் கோர்டில் கேட்கும் தொகை சன் டிவி நக்கீரன் பத்ரிக்கை என்க்கு அளித்தாக வேண்டும் இதற்கும் பெருமை பட வேண்டிய விஷயம் ஒரே இரவில் இவ்வளவு பெரிய தொகைக்கு பணக்காரன் அக்கியதற்கும் என்னை பற்றி தெரியாத பாமரனும் தெரிந்து கொள்வதற்கு வாய்ப்பாக அமைந்ததற்கு ,

ஒன்று புரிந்து கொள்ளுங்கள் நானுன் மனிதன் என்று ,உங்களுக்கு
உள்ள ஆச பாசமெல்லாம் எனக்கும் உண்டு நானும் கடவுளால் ஆறரிவு படைக்கப்பட்ட மனிதன் தான்

சிவன் கடவுள் அங்கு பார்வதி எதற்கு மனைவியாக கடவுளே உறவு கொண்டு அவர்களுக்கு வாரிசாக முருகர் ,விநாயகர் என்று அவர்களக்கு இரண்டு பிள்ளைகள் அதில் முருகருக்கு இரண்டு மனைவிகள் வள்ளி,தெய்வானை என்று இது ஊரறிந்த விஷயம் கடவுளே தனக்கு வாரிசு வேண்டும் என்று நினைக்கும் போழ்து நான் நினைப்பதில் என்ன தவறு,
ஒவ்வருவரும் இந்த உலகத்தில் பிறந்த ஆனைவரும் சம்பாதிக்க ஆசைபடும் பொழுது நான் சம்பாதிக்க ஆசைபடுவதில் என்ன தவறு ,அவரவர்கள் தேர்தெடுக்கும் தொழில் அன்று அம்பானி ,இன்று பிள்ளைகள்

நான் தேர்ந்தெடுத்த தொழில் கடவுள்க்காக பிரசங்கம் செய்வது,அதற்கான நிறம் காவி உடை அந்த உடையை அணிந்தால் தான் மக்கள் கடவுள்க்காக பேசவருகிறார் என்று நம்புகிறார்கள் .நான் ஜீன்ஸ் பான்ட் ஜீன்ஸ் ஷர்ட் போட்டு பேசவந்தால் மக்கள் ஒத்து கொள்வார்களா கேட்கத்தான் வருவார்களா .கடவுளுக்காக பூஜை செய்யவரும் அர்ச்சகரும் அவர்க்கும் வாரிசுகள் உண்டு.எனக்கு ஒரு வாரிசு வேண்டும் என்று நினைப்பதில் என்ன தவறு இருக்கிறது .அவரவர்கள் தொழிலுக்காக தேர்ந்தேடுக்கபடும் உடைகள் தான் வித்தியாசம் .

பள்ளி மாணவி மாணவனுடன் ஓட்டம் ,இந்த மாணவி உங்கள் குடும்ப பெண்ணாக இருந்தால் உங்களுக்கு கோபம் தலைகால் தெரியாமல் வரும் ஒத்து கொள்கிறிர்களா அந்த மாணவிக்கு அந்த வயதில் தேவைப்படும் பொருள் அன்பு கலந்த பாசம் அவரை அரவணைக்க ஒருவர் இதற்காக பதினான்கு வருடம் வளர்த்த பெற்றோரை ஒரே கணத்தில் தூக்கி விசிவிட்டு மாணவருடன் ஓட்டம் இந்த விஷயத்தை ஒங்களிடம் கூறினால் என்ன செய்விர்கள் இந்த வயதில் காதல் கத்தரிக்காய் எல்லாம் என்று தூக்கி விசிவிடுவிர்கள் யாருக்கு எந்த வயதில் என்ன தேவையோ அதை நம் உடலால் தடுக்கமுடியாது .அது மாத்ரி தான் காமமும் .

நம் கல் வெட்டுகளில் இருக்கும் கலை நிறைந்த சிற்பங்கள் முழுவதும் அன்பு காமம் கலந்த கலை நுட்பம் தான்.

வாழ்கையில் ஒருவர் சந்தோசமாக வாழ அன்பு, காமம் கலந்த பாசம் இதில் யார் திருப்தி அடைகிறார்களோ அவர்கள் வாழ்கையில் பிரச்சனை இருக்காது.

இந்த இரண்டில் எது ஒன்று குறைந்தாலும் வாழ்கையில் பிரச்சனைகள் வரத்தொடங்கும்.
கணவனோ,மனைவியோ ,திருமணதிற்கு பின் குறைந்தது வாழ்கையை புரிந்து கொள்வது வரை சண்டை இல்லாமல் இருக்க வாய்ப்பில்லை ஒரு குழந்தை வந்த பின் சண்டை குறையும் இது வாழ்வியல் நியதி.

நீங்கள் மனையிவிடம் அல்லது கணவருடன் உறவு கொள்ளும் பொழுது (,உங்கள் வாழ்கையில் வந்து போன பெண்கள் அல்லது ஆண்கள் நினைவில் வரவில்லையா )நம் மனைவி த்ரிஷா, அல்லது வேறு ஒருவர் மாத்ரி கணவர் அஜித் ,சூர்யா மாத்ரி இல்லையே என்று நினைக்காத மனங்கள் கண்டிப்பாக 10 சதவிதம் மட்டுமே இருக்க முடியும் இது மனித மனதின் அடுத்த நிலை.

இங்கு திருப்தி இல்லாதவர்களே கணவரை ,மனைவியை பிரிவது நடக்கும்

ரஞ்சிதா திருமண ஆனா பெண் ,ரஞ்சிதாவையோ அல்லது வேறு எந்த பெண்களையும் அவர் நேரில் போய் அழைக்கவில்லை அவரிடம் எதையோ எதிர்பார்த்து வந்தவர்கள் .

உடல் நலம் குறையால் படுத்து விட்டேன் பார்க்க சீடர்கள் இருக்கிறார்கள் உபசரிப்பார்கள் ,அனால் இங்கு ஒரு பெண் உதவுபது போல் அவர்களால் முடியாது ஒத்து கொள்கிறிர்களா .

சன் டிவி நித்யனன்தரை காட்டும் பொழுது முதலில் டிவி பார்பதாக கட்டினார்கள் அவருக்கு மிகவும் பிடித்த டிவி சன் டிவி தானாம்

என் கேட்கிரிகளா சன் டிவியில் வரும் நாடகங்கள் கண்மணி ,வசந்தம்
மற்றும் நிகழ்ச்சிகள்

சன் டிவியில் தான் ஒருவர் மனைவியை எத்தனை பேர் வைத்திருக்கலாம் என்றும் ,ஒரு மனைவி எத்தனை ஆண்களை புருஷனாக வைத்து கொள்ளள்ளலாம் என்றும் சீரியல்கள் கற்று தருகின்றன

சன் டிவியில் ஒலி பரப்படும் நாடகங்கள் எதிலுமே ஒருவனுக்கு ஒருத்தி என்று கோட்பாடு கிடையாது

அடுத்து ஆடவரெல்லாம் ஆடலாம் என்ற நிகழ்ச்சி உங்கள் வீட்டு பெண் குழந்தைகள் இந்த நிகழ்ச்சியை பார்த்தல் ஒழுக்கத்துடன் வாழ முடியுமா ,டீலா நோ டீலா நிகழ்ச்சி பெட்டி கொண்டு வருபர்கள் ஜட்டி (எனக்கு ஜட்டி மாத்ரி தான் தெரிகிறது)மட்டுமே போட்டு கொண்டு வருவர் உங்கள் குடும்பத்தில் உள்ள பதினாறு வயது பையன் இந்த நிகழ்ச்சி பார்த்து விட்டு சும்மா தூங்க முடியுமா இது மாத்ரி எத்தனையோ நிகழ்ச்சி நானும்(nityanandar) அப்படி தான் இரவில் நிகழ்ச்சியை பார்த்து வீட்டு கட்டு படுத்த முடியவில்லை .

நம் சட்டத்தில் குற்றம் செய்பவரை விட குற்றம் செய்ய தூண்டியவர் தான் முதல் குற்றவாளி அப்படி இருக்கும் பொழுது நான் எப்படி குற்றவாளியாக முடியும் .என்னை குற்றம் செய்ய துண்டியதே சன் டிவி தான்

நீங்கள் ஒத்து கொள்கிறிர்களா .

யார் குற்றவாளி நானா அல்லது சன் டிவி யா ?

படித்து விட்டு உங்கள் விருப்பு வெறுப்புகளை பதிவு செய்யவும்


நம் ஊடகங்கள் செய்யும் தவறுகள் தான் மனித மனதுகளை கெடுக்கிறது .
ஊடகங்கள் என்பது நல்ல கருத்தகளை கொடுப்பதாக இருக்கவேண்டும் .சன் டிவி மாத்ரி சேனல்கள் செய்யும் தவறு இந்த சமுதாயத்தை கெடுக்க நினைக்கிறது .இனி உங்கள் வீட்டு பிள்ளைகள் நல்ல நிகழ்ச்சிகளை பார்க்க கற்று கொடுங்கள் .





சன் டிவி இந்து மதத்தை கேவலமாக சித்தரிக்கும் போக்கில் செயல் படுகிறது நிஜம் நிகழ்ச்சியில்
காசியை பற்றி சொன்னார்கள் எது நிஜம் என்று தெரிந்து கொள்ளுங்கள் .

படித்து விட்டு உங்கள் விருப்பு வெறுப்பு களை பதிவு செய்யவும்

இதன் தொடர்ச்சியாகவே சென்ற மாதம் தொடர்ந்து நான்கு பகுதிகளாக காசி நகரைப் பற்றி ஒரு நிகழ்ச்சி ஒளிபரப்பியது சன் டிவி. “நிஜம் – காசி நகரத்தின் உண்மையான முகம்” என்று சன் நியூஸ் சானலில் அந்நிகழ்ச்சியை முன்நிறுத்தியது. அதே நிகழ்ச்சியை தற்போது சன் டிவியிலும் மறு ஒளிபரப்பு செய்து வருகின்றது. ஒரு மாதத்திற்குள்ளாக அந்நிகழ்ச்சியை இரண்டாவது முறையாக ஒளிபரப்பு செய்வதிலிருந்தே சன் நிறுவனத்தின் தீய நோக்கம் தெளிவாகிறது. சென்னையிலிருந்து ஆயிரம் கிலோமீட்டருக்கு அப்பால் உள்ள காசி நகரத்திற்கு ஒரு படக்குழுவினரை அனுப்பிய சன் டிவி, அங்கே படப்பிடிப்பை முடித்துக் கொண்டு வந்து தமிழர்களுக்குப் பின்வருமாறு அவதூறு செய்து காசிநகரத்தைக் காட்டியது.

■நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் முதியவர்கள் மரணத்தை எதிர்நோக்கியே காசி வருகிறார்கள். மரணத்தை எதிர்நோக்கிக் காத்திருக்கும் முதியவர்களுக்காகவே இங்கு பல மடங்கள் இருக்கின்றன.
■கங்கை நதிக்கரையில் பிணங்களை எரிக்கும் சுடுகாடுகள் இருக்கின்றன. பிணங்கள் கங்கை நதியிலும் மிதக்கவிடப்படுகின்றன. 24 மணி நேரமும் கங்கைக் கரையில் பிணங்கள் எரிந்து கொண்டிருக்கின்றன. மேலும் காசி நகரத்தில் எந்த திசையில் திரும்பினாலும் சிதைகள் தான் எரிந்து கொண்டிருக்கின்றன.
■கங்கைக் கரை முழுவதும் ‘அகோரிகள்’ எனப்படும் பிணம் தின்னும் சாமியார்கள் வாழ்கிறார்கள். அவர்கள் 24 மணி நேரமும் கஞ்ஜா, அபின் முதலிய போதை பொருட்களை உட்கொண்டு போதையிலேயே இருக்கின்றார்கள். நடு இரவில் உடலெங்கும் திருநீறு பூசி, எரியும் சிதையிலிருந்து மாமிசம் எடுத்துச் சாப்பிடுகிறார்கள்.
■காசி நகரத்து இளைஞர்களும், வெளியூர்களிலிருந்து வரும் இளைஞர்களும் காசியில் சுலபமாகக் கிடைக்கும் போதைப் பொருட்களை வாங்கி போதைக்கு அடிமையாகிறார்கள்.
■புனித நதி என்று சொல்லப்படும் கங்கை அசுத்தம் நிறைந்ததாகவே இருக்கிறது. இந்த அசுத்த நதியில் குளித்தால் பாவம் தீர்ந்து மோட்சம் கிட்டும் என்றும், இங்கு வந்து திவசம் செய்வதால் முன்னோர்களின் ஆன்மா சந்தியடைந்து அவர்களின் சாபம் தீரும் என்றும் நம்பி ஏராளமான இந்துக்கள் காசி நகரத்திற்கு வந்த வண்ணம் உள்ளனர்.
சன் டிவி காட்டாமல் மறைத்த விஷயங்கள்

கங்கைக் கரையில் கட்டங்கள் பல இருப்பதை நாம் மேலே பார்த்தோம். அவற்றில் ஹரிச்சந்திர கட்டம் என்பது உண்மையிலேயே பிணங்கள் எரிக்கப்படும் இடம் தான். இங்கு தான் ஹரிச்சந்திரன் சுடுகாட்டின் காவலனாக இருக்கும் போது அவன் மனைவி சந்திரமதி இறந்து போன அவர்களின் மகனுக்கு ஈமக் கிரியைகள் செய்ய வருகிறாள். எனவே தான் அந்த இடத்திற்கு ஹரிச்சந்திர கட்டம் என்று பெயர் வந்தது. இந்து மத சாஸ்த்திரப்படியே இறந்தவர்களின் உடலை எரித்த பின்னர் அவர்களின் அஸ்தியை கடலிலோ, நதியிலோ கரைப்பது வழக்கம். மேலும் கங்கை பாவங்களைப் போக்கும் புண்ணிய நதி என்ற நம்பிக்கை இருப்பதால் அங்கு வந்து பிணங்களை எரித்து அஸ்தியைக் கரைப்பதென்பது சாதாரணமான விஷயம். இதை ஏதோ ஒரு கேவலமான விஷயம் போல சித்தரித்தது சன் டிவி. கங்கைக்கரையில் நடத்தப்படும் புண்ணியம் மிகுந்த பித்ரு காரியங்களையோ, யாத்ரீகர்கள் கங்கா மாதாவிற்குச் செய்யும் பூஜைகளையோ, தினமும் அந்தி சாயும் நேரத்தில் அற்புதமாக நடக்கும் ஆரத்தி வழிபாட்டையோ சன் டிவி காட்டவில்லை.

அதற்கு நேர்மாறாக நடு இரவில் அகோரிகள் அலைந்து திரிந்து போதை வஸ்துக்களை உட்கொள்வதைக் காட்டினர். அகோரிகள் என்பவர்கள் ஒரு காலத்தில் இருந்ததாகச் சொல்லப்பட்டது. காபாலிகர்கள் என்பவர்களைப் பற்றியும் நாம் படித்திருக்கிறோம். ஆனால் அவர்கள் இப்போதும் இருக்கிறார்கள் என்று சொல்வதெல்லாம் வெறும் கட்டுக்கதை. தலை முடி வளர்த்துக்கொண்டு, உடலெல்லாம் விபூதி பூசிக் கொண்டு, சதா சர்வ காலமும் போதை ஏற்றிக் கொண்டு இருக்கும் “நாகா” சாமியார்கள் இருக்கிறார்கள். அவர்களும் பிரயாகை என்று சொல்லப்படும் அலகாபாத்தில் தான், அதுவும் கும்ப மேளா சமயத்தில் தான் இருப்பார்கள். பிறகு தங்கள் இடங்களுக்குச் சென்று விடுவார்கள். ஆனால் அவர்கள் சன் டிவி காட்டியதைப் போல் உடையணிந்தவர்கள் அல்ல. நிர்வாணச் சாமியார்கள். மேலும் அவர்கள் பிணம் தின்பவர்கள் அல்ல. சன் டிவியிலும் ஒரே ஒருவரைத் தான் பிணம் தின்பதைப்போல் காட்டினார்கள். ஆனால் அவர் சாமியாரைப் போலல்லாமல் மொட்டைத் தலையராக இருந்தார். நெற்றியிலோ உடலிலோ திருநீறும் பூசியிருக்கவில்லை. மேலும் அவர் எரியும் சிதையருகே உட்கார்ந்து கொண்டு ஏதோ மாமிசம் ஒன்றை (ஆடோ, கோழியோ, ஏதோ ஒன்று) தின்பது போல் காட்டினார்களே ஒழிய, சிதையிலிருந்து அவர் நர மாமிசத்தை எடுத்து சாப்பிடுவதாகக் காட்டவில்லை.

காசியில் உள்ள பிரசித்தி பெற்ற ஆலயங்கள் பக்கம் தப்பித் தவறி கூட படப்பிடிப்புக் குழு செல்லவில்லை. கங்கையில் நடக்கும் பூஜை வழிபாடுகளைக் காண்பிக்கவில்லை. வரலாற்றுச் சிறப்பு மிக்க இடங்களைக் காட்டவில்லை. காசி நகரம் எவ்வளவு சிறந்த கல்விச்சாலையாக இருந்திருக்கிறது என்பதைச் சொல்லவில்லை. பாரத தேசத்தின் ஆன்மீகம், கலாசாரம், பாரம்பரியம் ஆகியவை சிறக்க காசியை ஆண்ட மன்னர்கள் எவ்வளவு சேவைகள் செய்துள்ளார்கள் என்பதைச் சொல்லவில்லை. அங்கு உள்ள விஸாலாட்சி கோவில் நம் தமிழகத்தைச் சேர்ந்த நகரத்தார்களால் அருமையாக நிர்வாகம் செய்யப் படுகின்ற நல்ல விஷயத்தைப் பற்றிச் சொல்லவில்லை சன் டிவி.

முகலாயர்கள் எவ்வாறு காசி நகரத்தை அழித்தார்கள் என்றும், காசி விஸ்வநாதர் ஆலயம் போன்ற ஏராளமான ஆலயங்களை அவர்கள் எவ்வாறு அழித்தார்கள் என்பதைச் சொல்லவில்லை. இன்றும் விஸ்வநாதர் ஆலயத்தின் நந்தி மசூதியைப் பார்த்தவண்ணம் நின்றிருப்பதே முகலாயர்கள் ஆலயத்தை இடித்து தரைமட்டமாக்கி அவ்விடத்தில் மசூதியைக் கட்டியுள்ளார்கள் என்பதற்குச் சரியான சாட்சி என்பதைச் சொல்லவில்லை.

காலம் சென்ற ஷெனாய் இசைக்கலைஞர் உஸ்தாத் பிஸ்மில்லாகான் இஸ்லாமியராக இருந்தாலும் கங்கை நதியையும், விஸ்வநாதர் ஆலயத்தையும் எவ்வாறு போற்றினார் என்கிற மத நல்லிணக்கத்துக்கு உதாரணமான உண்மையைச் சொல்லவில்லை. அம்மத நல்லிணக்கத்தை உடைகும் விதமாக, சங்கடங்களைத் தீர்த்து மோட்சம் அளிக்கும் சங்கட் மோட்சன் ஹனுமான் கோவிலிலும், காசி ரெயில் நிலையத்திலும் இஸ்லாமியப் பயங்கரவாதிகள் எவ்வாறு குண்டு வைத்துத் தாக்கினர் என்று காட்டவில்லை.

தங்களுக்குச் சிறிதும் சம்பந்தமே இல்லாத கங்கைக் கரையில் கிளை அலுவலகம் அமைத்து “மிஷநரீஸ் ஆஃப் சாரிடி” அங்கு வாழும் ஓடக்காரர்களை கிறுத்துவர்களாக மதம் மாற்றுவதைப் பற்றி விளக்கவில்லை. இந்துக்கள் தங்கள் பித்ருக்களுக்கு கங்கையின் ஐந்து கட்டங்களிலும் ஓடத்தில் சென்று தான் காரியங்கள் செய்ய வேண்டும். மேலும் கங்கைக் கரையிலும் நீரிலும் இந்துக்கள் தங்கள் காரியங்களைச் செய்வதற்கு ஓடக்காரர்களின் உதவி பெரிதும் இன்றியமையாதது. எனவே அவ்வாறு ஓடக்காரர்களை மதம் மாற்றுவதன் மூலம் இந்துக்களின் முக்கியமான ஆன்மீக கலாசார நிகழ்வுகளை அடியோடு அழிக்க நினைக்கிறார்கள் கிறுத்துவ மிஷநரிகள் என்கிற உண்மையை சன் டிவி சொல்லவில்லை.

கங்கை நதியின் அசுத்தத்திற்கு ஏதோ இந்துக்கள் தான் காரனம் என்பது போன்று சித்தரிக்கிறது சன் டிவி. அங்கு உள்ள மக்களுக்கு அடிப்படை வசதிகள் கூட அரசாங்கம் செய்து தரவில்லை என்பதைச் சொல்லவில்லை. கங்கைக் கரையை ஒட்டியுள்ள பனாரஸ் பட்டுத் துணிகள் தயாரிப்பு நிறுவனங்கள் தங்களின் சாயக்கழிவுகளை கங்கை நதியில் கலக்கவிடுவதைக் காட்டவில்லை. கரையில் உள்ள விடுதிகளிலிருந்து கழிவுகளும் நதியில் கலப்பதைக் காட்டவில்லை. கங்கையைச் சுத்தம் செய்வதற்காக அரசு செலவிடும் கோடிக்கணக்கான மக்களின் வரிப்பணம் அரசியல் வாதிகளின் வங்கிகளை நிறப்புவதைப் பற்றிச் சொல்லவில்லை.

சாரநாத் சென்று அங்கே தழைத்தோங்கிய புத்த மதத்தைப் பற்றி ஒரு வார்த்தை கூடச் சொல்லவில்லை. அங்கேயுள்ள சைவ, பௌத்த, ஜைன ஆலயங்களைக் காட்டவில்லை. புத்த கயாவிலிருக்கும் அதே போதி மரம் அங்கும் இருப்பதைக் காட்டவில்லை. சீனக் கோவில்களைக் காண்பிக்கவில்லை.

சன் டிவியின் ரகசிய குறிக்கோள்

வெறும் பிணங்கள் எரிவதையும், பிச்சைக்காரர்களைச் சாமியார்களாகவும், அந்திம காலத்தில் நிம்மதியாக இறைசேவை செய்பவர்களை மரணத்தைத் தேடி வந்தவர்களாகவும், சித்தரித்து இந்து மதத்தைக் கேவலப் படுத்துவதற்காகவே சன் டிவி ஒரு குழுவை ஆயிரக்கணக்கான மைல்களுக்கு அப்பால் உள்ள காசி நகரத்திற்கு அனுப்பியுள்ளது. புண்ணிய ஸ்தலமான காசியையும், புண்ணிய நதியான கங்கையையும், சிறுமைப் படுத்தி, அவற்றைப் பார்வையாளர்கள் வெறுத்து ஒதுக்க வேண்டும் என்கிற ஒரே எண்ணத்துடன், மீண்டும் மீண்டும் பிணங்களையும், போதை ஏற்றும் பிச்சைக்காரர்களையுமே காட்டி, அது தான் உண்மையான காசியின் நிஜ முகம் என்று மக்களை ஏமாற்ற முயன்றுள்ளது சன் டிவி நிறுவனம். அயோக்கியத்தனமான அம்முயற்சியில் ஹிந்துக்களின் ஆன்மீக, கலாசார உணர்வுகளைப் பெரிதும் புண்படுத்தியுள்ளது இந்த அழுக்கு நிறுவனம். இது மிகக்கடுமையாகக் கண்டிக்கப் படவேண்டிய ஒரு விஷயம்.

சன் டிவியிடம் சில கேள்விகள்

* இந்து மத பழக்கவழக்கங்களை அவமதிப்பு செய்து அவற்றைப் பற்றி அவதூறாக சித்தரித்து நிகழ்ச்சிகள் ஒளிபரப்புவதைப் போல் மற்ற மதங்களில் நடக்கும் அசிங்கங்களையும், அராஜகங்களையும் ஏன் நிஜம் நிகழ்ச்சியில் காண்பிப்பதில்லை?

* காசி நகரத்தின் மறு பக்கம் என்று காண்பிப்பதைப்போல், நாகூரின் மறுபக்கம் என்றோ வேளாங்கன்னியின் நிஜ முகம் என்றோ காண்பிக்கத் தைரியம் இருக்கிறதா?

* ஆயிரம் மைல்களுக்கு அப்பால் உள்ள காசி நகரத்திற்குச் சென்று படம்பிடித்த மாதிரி, இதோ சில நூறு மைல்களே தள்ளியுள்ள கேரளத்திற்குச் சென்று அங்கு உள்ள சர்ச்சுகளில் பாதிரிமார்கள் நடத்தும் லீலாவினோதங்களைப் பற்றி ஒரு நிகழ்ச்சி நடத்த தைரியம் இருக்கிறதா?

* ஒரு கன்னியா ஸ்த்ரீயே எழுதியுள்ள “ஆமென்” என்ற புத்தகத்தில் உள்ள உண்மையான நிகழ்வுகளைப் படம் பிடித்து ஒளிபரப்பலாமே? கத்தோலிக்க சர்ச்சின் நிஜ முகம் அல்லது கத்தோலிக்க மதகுருமார்களின் மறு பக்கம் என்று காண்பிக்கலாமே?

* அதே கேரளம் தான் இன்று இஸ்லாமிய பயங்கரவாதிகளின் பிறப்பிடமாக இருந்து வருகிறது. அதைப் பற்றி ஒரு ‘நிஜம்’ நிகழ்ச்சி காட்டலாமே? மதரசாக்களில் என்ன நடக்கிறது என்று படம் பிடிக்கத் தைரியம் இருக்கிறதா?

* அம்மாநிலத்தில் நடக்கும் ‘லவ் ஜிகாத்’ பற்றிப் பல வாரங்கள் தொடர்ந்து நிகழ்ச்சி செய்யலாமே? அதற்குத் தைரியம் இருக்கிறதா?

* ஏன் கேரளத்திற்குச் செல்ல வேண்டும்? சென்னையிலேயே கிழக்குக் கடற்கரைச் சாலையில் உள்ள ஏராளமான கிறுத்துவ அனாதைக் குழந்தை விடுதிகளிலும், பெண்கள் காப்பகத்திலும் நடக்கும் பாலியல் வன்முறைகளைக் காண்பிக்கும் தைரியம் இருக்கிறதா? அங்கு நடக்கும் ஊழல்களையும், அங்கு வந்து தங்கும் வெளிநாட்டினர் அந்த அனாதைப் பெண்களையும் குழந்தைகளையும் எவ்வாறு சித்திரவதை செய்கின்றனர் என்று காட்டலாமே?

* யோபு சரவணன் போன்ற, அப்பாவி மக்களின் சொத்துக்களைச் சூறையாடிய, பாதிரிகளைப் பற்றி ஒரு நிஜம் நிகழ்ச்சி செய்யலாமே?

இந்த லிங்கில் உள்ள செய்திகளை போடா தயாராகுமா சன் டிவி

http://devapriyaji.activeboard.com/forum.spark?aBID=134804&p=3&topicID=34454994* காசியின் மறுபக்கத்தைப் போல் மதுரையின் மறுபக்கத்தைக் காட்டத் தைரியம் இருக்கிறதா? மதுரையில் நடக்கும் அரசியல் அராஜகங்களைக் காட்ட வேண்டியது தானே? தங்களின் நிறுவன அலுவலகத்தையே கொளுத்தி மூன்று அப்பாவிகளைக் கொன்றார்களே! பேருக்கு சி.பி.ஐ. விசாரணை என்று சொல்லி ஒரே மாதத்திற்குள் ஜாமினில் வெளிவந்து, இப்போது அனைவரும் விடுதலையாகி சுதந்திரமாக வெளியில் உலவுகிறார்களே! இவர்கள் அந்த மூன்று அப்பாவிகளை ஏன் கொன்றார்கள்? யார் சொல்லிக் கொன்றார்கள்? சாட்சிகள் ஏன் மனம் மாறினார்கள்? அவர்கள் மிரட்டப் பட்டார்களா? இதையெல்லாம் ‘மதுரையின் நிஜ முகம்’ என்று காண்பிக்க வேண்டியது தானே? தாக்கப் பட்டது சன் டிவி அலுவலகம் தானே? இறந்து போனவர்கள் சன் டிவி குழுமத்தைச் சேர்ந்த தினகரன் அலுவலகத்தில் வேலைப் பார்த்தவர்கள் தானே? கொலைகாரர்கள் விடுதலையானவுடன் உயர் நீதி மன்றத்தில் ஏன் மேல்முறையீடு செய்யவில்லை? இதையெல்லாம் பற்றி நிஜம் நிகழ்ச்சி நடத்துவது தானே?

கண்டிக்க வேண்டும், எதிர்க்க வேண்டும்

விஜய் டிவியில் ’நீயா நானா’ நிகழ்ச்சியிலும், ‘நடந்தது என்ன’ நிகழ்ச்சியிலும் எவ்வாறு ஹிந்துக்களைப் புண்படுத்துகிறார்களோ, அதே போல் தான் சன் டிவி மற்றும் ஏனைய சானல்களிலும் செய்கிறார்கள். விஜய் டிவிக்கு எதிராக வலுவான கண்டனம் பதிவு செய்யப் பட்டது. அதே போல் சன் டிவிக்கு எதிராகவும் கண்டனம் பதிவு செய்யப் பட வேண்டும். நிஜம் போன்ற நிகழ்ச்சிகளைப் புறக்கணிக்க வேண்டும். அந்நிகழ்ச்சிகளை விளம்பரம் மூலம் ஆதரிக்கும் நிறுவனங்களுக்கு எச்சரிக்கை விடுக்க வேண்டும். இத்தகைய எச்சரிக்கைகள் பயனளிக்காவிட்டால் அந்த நிறுவனங்களின் தயாரிப்புகளை/சேவைகளை முற்றிலும் புறக்கணிப்போம் என்ற நிலைப்பாடு எடுக்க வேண்டும்.

நம் கண்டனத்தையும் எதிர்ப்பையும் மடல்கள் மூலமும் தொலை பேசி மூலமும் தெரிவிக்க வேண்டும்

படித்து விட்டு உங்கள் விருப்பு வெறுப்பு களை பதிவு செய்யவும்

சன் டிவியின் அராஜகங்கள்

காசி மஹாத்மியம்

காசியின் நிஜ முகம் பற்றி தெரிந்து கொள்ள இங்கே கிள்க் செய்யவும்

http://www.youtube.com/watch?v=tMsSa1eR0AY&feature=related

வடக்கே இமயம், தெற்கே ராமேஸ்வரம், கிழக்கே புரி, மேற்கே துவாரகை என்று நம் பாரத தேசமே ஒரு புண்ணிய பூமியாக இருக்கிறது. இந்தப் புண்ணிய பூமியின் நடுவே இருக்கிறது புண்ணிய நதியாம் கங்கை பிரவாஹமாக ஒட்டிக்கொண்டிருக்கும் காசி மாநகரம்.

“ஸாதாரணமாக எந்த க்ஷேத்ரத்தின் ஸ்தல புராணத்தைப் பார்த்தாலும் ‘இது காசிக்குச் சமமானது; அல்லது காசியை விட உசந்தது’ என்றே இருக்கும். இப்படி ஒரு க்ஷேத்ரத்தை மற்ற எந்த க்ஷேத்ரத்தோடும் ‘கம்பேர்’ பண்ணாமல் காசியோடேயே எல்லா க்ஷேத்ரங்களையும் ஒப்பிட்டிருப்பதாலேயே காசி தான் க்ஷேத்ர ராஜா என்று தெரிகிறது. இப்படியே மற்ற புண்ய தீர்த்தங்களைப் பற்றிய புராணங்களிலும் அவற்றை ஒன்றோடொன்று ஒப்பிட்டு உசத்தி சொல்லாமால், அந்தந்த நதியைப் பற்றி ‘இது கங்கா துல்யமானது’ அல்லது ‘கங்கையை விட விசேஷமானது’ என்று தான் சொல்லியிருக்கும். இதனாலேயே கங்கை தான் தீர்த்தங்களில் தலைசிறந்தது என்று ‘ப்ரூவ்’ ஆகிறது”. (காஞ்சி மஹாஸ்வாமிகள்- தெய்வத்தின் குரல் – ஏழாம் பகுதி – பக்கம் 832)

வடமாநிலங்களில் உள்ளவர்கள் தென் பகுதிகளுக்கும், தென்மாநிலங்களில் உள்ளவர்கள் வடப் பகுதிகளுக்கும் க்ஷேத்ராடனம் போவது நம் தேசத்தில் தொன்று தொட்டு வரும் ஆன்மீகக் மரபு. இந்த கலாசாரமே பல மொழிகள் பேசும், பல பழக்க வழக்கங்கள் கடைபிடிக்கும் நம் தேச மக்களின் ஒருமைப்பாட்டிற்கு இலக்கணமாக விளங்குகிறது. உதாரணமாக ராமேஸ்வரத்தின் அக்னி தீர்த்த (கடல்)மண்ணை எடுத்துச் சென்று பிரயாகையில் (அலகாபாத்) கங்கை, யமுனை, சரஸ்வதி சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில் கரைத்து, பின்னர் அங்கிருந்து கங்கை நீரை எடுத்து வந்து ராமேஸ்வரத்தில் இறைவனுக்கு அபிஷேகம் செய்து, காசி ராமேஸ்வரம் ஆகிய இரண்டு தலங்களிலும் பித்ருக்களுக்கு சிராத்தம், தர்ப்பணம் ஆகியவை செய்து முடித்த பின்னரே காசி-ராமேஸ்வர க்ஷேத்ராடனம் பூர்த்தியடைகிறது. இவ்வாறு ஆன்மீகத்திலும் கலாசாரத்திலும் பின்னிப்பிணைந்து மக்களை ஒற்றுமையாக வைத்திருப்பதே இந்து மதம் என்கிற சனாதன தர்மம்.

பாவலரும் நாவலரும் பண் மலரக் கண்மலரும்
காவலரும் ஏடவிழ்க்கும் காசியே - தீ வளரும்
கஞ்சக் கரத்தான் கலைமறைக்கு நாயகமாம்
அஞ்சக் கரத்தான் அகம்

- குமரகுருபரர் (காசிக் கலம்பகம்)

முதல் இரண்டு அடிகளில், ஏடவிழ்க்கும் (இதழ் விரிக்கும்) அலர்களையும் (பூக்களையும்), தங்கள் ஏடவிழ்க்கும் (சுவடிகளைத் திறக்கும்) நாவலர்களையும் குறிக்குமாறு இரு பொருள்பட அமைந்த அழகிய பாடல் இது. தென் தமிழ் நாட்டில் பிறந்த குமரகுருபரர் காசி சென்று சைவ மடம் அமைத்தார்.

காசித் தலத்தின் பெருமைகளைக் கூறும் காசிக் கலம்பகம் என்ற அழகிய நூலையும் எழுதினார்.

காசி க்ஷேத்திரத்தின் பெருமைகளைச் சொல்லிக்கொண்டே போகலாம். காசி நகரத்தின் வடக்கு திசையிலிருந்து வரும் “வருணா” நதியும், தெற்கு திசையிலிருந்து வரும் “அசி” நதியும் கங்கை நதியில் கலக்கின்றதால் “வாரணாசி” என்றும் அழைக்கபடுகிறது. பகவான் மஹாதேவர் தன்னுடைய திரிசூலத்தின் மேல் கால்களை வைத்து நின்று இந்தக் காசி நகரத்தைப் படைத்தார் என்று நம்பப் படுகிறது. ஆகையால் எந்த ஜந்துவும் தன்னுடைய சரீரத்தை இங்கு தியாகம் செய்தால் மோட்சம் அடைந்து சிவலோகம் செல்வதாக ஐதீகம்.

மேலும் பகவான் ஆதி சங்கரர் தன் அத்வைத ஸ்தாபனத்தை இங்கிருந்தே ஆரம்பிக்கிறார் என்று சொல்லலாம். அன்றைய சமூக அடுக்கில் தாழ்ந்திருந்த சண்டாளனிலும் பிரம்மத்தைக் காண வேண்டும் என்ற நடைமுறை அத்வைதம் சங்கரரின் மெய்யுணர்வில் உருவானது இந்தத் தலத்தில் தான்! அந்த உபதேசத்தைத் தனக்கு நல்கிய சண்டாளனையே குருவாகப் போற்றி அவர் “மனிஷா பஞ்சகம்” என்ற துதியை அருளியதும் காசியில் தான்!

பார்க்க: மனிஷா பஞ்சகத்தின் தமிழ் வடிவம் : சாதி வெறியருக்கு சங்கரர் எழுதியது

ஆன்மீகத்தின் மூலமாகவும், கலாசாரத்தின் மூலமாகவும் நம் தேசத்தின் ஒருமைப்பாடு காக்கப் படுவதற்கு காசி-காஞ்சி நகரங்களின் தொடர்பும், கங்கை-காவிரி நதிகளின் தொடர்பும் சிறந்த ஆதாரங்களாக இருக்கின்றன.

“காசிக்கும் காஞ்சிக்கும் நடுவே ஆயிரம் மைலுக்கு மேல் இருக்கிறது. காசியில் அன்னபூரணி விசேஷம். காஞ்சீபுரத்திலும் ஜகன்மாதா 32 தர்மங்களைப் பண்ணும் போது அன்னதானம் பண்ணியிருக்கிறாள். காமாக்‌ஷி ஆலயத்தில் கர்ப்ப கிருஹத்தின் நுழைவாசலுக்கு நேரே அன்னபூர்ணேச்வரிக்கு ஸந்நிதி இருக்கிறது. அதன் விமானத்தில் தக்ஷிண தேசத்தில் வேறே எங்கேயும் இல்லாத விதத்தில் ஆறு சிகரங்கள் இருக்கின்றன. ஏன் இப்படி இருக்கிறது என்பதற்குப் பதில் காசியில் கிடைக்கிறது! காசியில் அன்னபூரணி விமானத்தில் இதே மாதிரி ஆறு சிகரங்கள் இருக்கின்றன. அதன் அச்சாகத்தான் இங்கே ஆயிரம் மைல் தாண்டிக் காஞ்சியிலும் இப்படி இருக்கிறது! சின்ன விஷயங்களில் கூட இவ்விதம் தேசத்தின் வெவ்வேறு கோடிகளில் உள்ள ஸ்தலங்களில் ஒற்றுமையிருப்பதால் க்ஷேத்ர ஐதிஹ்யங்களை லேசாகத் தள்ளி விடுவதற்கில்லை என்று தெரிகிறதல்லவா?” - (காஞ்சி மஹாஸ்வாமிகள்- தெய்வத்தின் குரல் – இரண்டாம் பகுதி – பக்கம் 745-746)

காசியின் பெருமைகள்

மேற்கண்ட பழம்பெருமை வாய்ந்த புராண மற்றும் வரலாற்றுச் சிறப்புகள் மட்டுமல்லாமல், மேலும் பல வரலாற்றுச் சிறப்பு மிக்க பெருமைகளும் இடங்களும் காசி நகரத்திற்கு உண்டு. காசி விஸ்வநாதர் கோவில், கால பைரவர் கோவில், அன்னபூர்ணேஸ்வரி கோவில், விசாலாக்‌ஷி கோவில், துர்கை கோவில், சங்கட் மோட்சன் ஹனுமான் கோவில், துளசிமனாஸ் மந்திர், பாரத மாதா கோவில், கிரி ஸ்வாமி பாஸ்கரானந்த் சமாதி, என்று பல ஆலயங்கள் உள்ளன. மேலும் புண்ணிய நதியாம் கங்கையும் அதன் கரையில் உள்ள ஹரிசந்திர கட்டம், சிந்தா கட்டம், தசாஸ்வமேத கட்டம், மணிகர்ணிகா கட்டம், பஞ்சகங்கா கட்டம், ஆகிய கட்டங்களும், கங்கை நதியைப் பூஜை செய்து வழிபடும் அற்புதமான ‘ஆரத்தி’ வழிபாடும் மிக முக்கியமானவை.

திருத்தசாங்கம் என்று ஒரு சிற்றிலக்கிய பிரபந்த வகை உண்டு.. ஒரு தலத்தின் இறைவனை (அல்லது ஒரு நாட்டின் மன்னனை/அரசியை) முன்வைத்து அவனது நாமம், நாடு, நகர், கொடி, மலை, ஆறு என்று பத்து அம்சங்களைச் சிறப்பித்து வெண்பாக்களாகப் பாடும் பாடல் வகை. இந்தப் பாடல் வகையில் பாரதமாதாவை முன்வைத்து மகாகவி பாரதி “பாரத தேவியின் திருத்தசாங்கம்” என்று பாடியிருக்கிறார். அதில், பாரத தேவியின் நகராகவும், ஆறாகவும் எவற்றைக் கூறுகிறார் தெரியுமா?

இன்மழலைப் பைங்கிளியே! எங்கள் உயிரானாள்
நன்மையுற வாழும் நகரெதுகொல்? - சின்மயமே
நானென் றறிந்த நனிபெரியோர்க் கின்னமுது
தானென்ற காசித் தலம்.

வண்ணக் கிளி! வந்தே மாதரமென் றோதுவரை
இன்னலறக் காப்பா ளியாறுரையாய்! - நன்னர்செயத்
தான்போம் வழியெலாம் தன்மமொடு பொன்விளைக்கும்
வான்போந்த கங்கையென வாழ்த்து.

மேலும், காசி மன்னரின் அரண்மனை, ஸம்ஸ்க்ருத பல்கலைக் கழகம், பனாரஸ் ஹிந்து பலகலைக் கழகம், பனாரஸ் பல்கலையில் உள்ள கோவில், சாரநாத் நகரம், சாரநாத் புத்தர் கோவில், தாமெக் ஸ்தூபி, அருங்காட்சியகம், இலங்கை ஆளுனர் ஜப்பானிய முறைப்படி கட்டிய முல்காஞ் குடி விஹார், அதனருகில் அசோகச் சக்ரவர்த்தி புத்த கயாவிலிருந்து அனுப்பிய போதி மரம், 23-வது தீர்த்தங்கரரான பர்ஸ்வனாத் பிறந்த இடத்தில் உள்ள ஜெயின் கோவில், சீனர் கோவில் மற்றும் சாரநாத் மஹாதேவர் கோவில் ஆகியவையும் இருக்கின்றன.

தமிழ் இந்துக்களின் அறியாமை

நம் தமிழ் இந்துக்களைப் பொறுத்தவரை பெரும்பான்மையானவர்கள் “காசி யாத்திரை” என்று கேள்விப் பட்டிருப்பார்களேயன்றி, காசி நகரத்தின் மஹாத்மியத்தைப்பற்றிப் பலர் அறிந்திலர். கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக, சொல்லப்போனால் சுதந்திரம் அடைவதற்கு முன்பிருந்தே, நாத்திகம் தலைதூக்க ஆரம்பித்ததிலிருந்து, திராவிட இனவெறியாளர்கள் தங்கள் விஷப் பிரசாரத்தினால் தமிழ் இந்துக்களை மூளைச்சலவை செய்து வைத்திருக்கிறார்கள். தமிழகத்தின் எல்லை தாண்டினால் தமிழனுக்கு மதிப்பில்லாமல் செய்துவிட்டார்கள். ஆரிய-திராவிட கட்டுக்கதை, ஸம்ஸ்க்ருத விரோதம், இந்தி எதிர்ப்பு, வடமாநிலங்கள் மட்டுமல்லாமல் அண்டை மாநிலங்களுடனும் சண்டை சச்சரவுகள் என்று தமிழர்களை குண்டு சட்டியில் குதிரை ஓட்டுபவர்களாக, கிணற்றுத் தவளைகளாக வைத்திருக்கின்றார்கள்.இதன் பயன் பெரும்பான்மையான தமிழ் இந்துக்கள் இந்து மதத்தின் பாரம்பரியமும், கலாசாரமும், மகத்துவமும், விசேஷங்களும் தெரியாமலேயே வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்.

இம்மாதிரியன சூழலில் அனைத்து அமைப்புகளுக்கும் தமிழ் மக்களை நல்ல வழியில் விழிப்புணர்ச்சி ஏற்படுத்தி நடத்திச் செல்லும் பொறுப்பு இருக்கின்றது. ஊடகங்களுக்கும் அப்பொறுப்பு உண்டு. தேசப்பற்றும், சமூகப் பொறுப்புணர்ச்சியும் உள்ள ஊடகங்களாக இருந்தால் அவ்வாறு தான் செய்யும். ஆனால் தமிழகத்து ஊடகங்களில் பெரும்பான்மையானவை நாத்திக, இடது சாரி சிந்தனைகள் உடையவையாக இருக்கின்ற காரணத்தால், இந்து கலாசாரத்திற்கு எதிராகவே செயல்பட்டு வருகின்றன. ஊடகங்களின் அத்தகைய செயல்பாட்டிற்கு உதாரணமாக தமிழக முதல்வர் கருணாநிதி அவர்களின் சொந்தங்களினால் (மாறன் குடும்பத்தினர்) நடத்தப்படும் “சன் டிவி” நிறுவனத்தைச் சொல்லலாம்.

சன் டிவி முன் நிறுத்திய காசி

“சன் நியூஸ்” தொலைக்காட்சியில் “நிஜம்” என்கிற பெயரில் ஒரு நிகழ்ச்சி ஒளிபரப்பப்படுகிறது. இந்நிகழ்ச்சியின் மூலம் பெரும்பான்மையாக இந்து ஆன்மீக, கலாசார, பழக்கவழக்கங்களை கேவலமாகச் சித்தரித்து, பார்வையாளர்கள் மனதில் இந்து மதத்தைப் பற்றிய தவறான எண்ணங்களை ஏற்படுத்தி, இந்து மதத்தின் உன்னதமான கலாசாரத்தை அவர்கள் வெறுத்து ஒதுக்குமாறு செய்வதையே தொழிலாகக் கொண்டிருக்கிறது சன் டிவி. கிராமங்களிலும், வனவாசிகளிடத்திலும் ஆண்டாண்டு காலமாக இருந்து வரும் நம்பிக்கைகளை தூற்றி, எள்ளிநகையாடி, மூடநம்பிக்கைகள் என்று ஏளனம் செய்து, இந்து மதம் அறிவியல் கோட்பாடுகளுக்கு சற்றும் ஒத்துவராத மதம் என்று பார்வையாளர்கள் மனதில் குழப்பங்கள் விளைவித்து வருகின்றது இந்நிறுவனம்.

இதன் தொடர்ச்சியாகவே சென்ற மாதம் தொடர்ந்து நான்கு பகுதிகளாக காசி நகரைப் பற்றி ஒரு நிகழ்ச்சி ஒளிபரப்பியது சன் டிவி. “நிஜம் – காசி நகரத்தின் உண்மையான முகம்” என்று சன் நியூஸ் சானலில் அந்நிகழ்ச்சியை முன்நிறுத்தியது. அதே நிகழ்ச்சியை தற்போது சன் டிவியிலும் மறு ஒளிபரப்பு செய்து வருகின்றது. ஒரு மாதத்திற்குள்ளாக அந்நிகழ்ச்சியை இரண்டாவது முறையாக ஒளிபரப்பு செய்வதிலிருந்தே சன் நிறுவனத்தின் தீய நோக்கம் தெளிவாகிறது. சென்னையிலிருந்து ஆயிரம் கிலோமீட்டருக்கு அப்பால் உள்ள காசி நகரத்திற்கு ஒரு படக்குழுவினரை அனுப்பிய சன் டிவி, அங்கே படப்பிடிப்பை முடித்துக் கொண்டு வந்து தமிழர்களுக்குப் பின்வருமாறு அவதூறு செய்து காசிநகரத்தைக் காட்டியது.

■நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் முதியவர்கள் மரணத்தை எதிர்நோக்கியே காசி வருகிறார்கள். மரணத்தை எதிர்நோக்கிக் காத்திருக்கும் முதியவர்களுக்காகவே இங்கு பல மடங்கள் இருக்கின்றன.
■கங்கை நதிக்கரையில் பிணங்களை எரிக்கும் சுடுகாடுகள் இருக்கின்றன. பிணங்கள் கங்கை நதியிலும் மிதக்கவிடப்படுகின்றன. 24 மணி நேரமும் கங்கைக் கரையில் பிணங்கள் எரிந்து கொண்டிருக்கின்றன. மேலும் காசி நகரத்தில் எந்த திசையில் திரும்பினாலும் சிதைகள் தான் எரிந்து கொண்டிருக்கின்றன.
■கங்கைக் கரை முழுவதும் ‘அகோரிகள்’ எனப்படும் பிணம் தின்னும் சாமியார்கள் வாழ்கிறார்கள். அவர்கள் 24 மணி நேரமும் கஞ்ஜா, அபின் முதலிய போதை பொருட்களை உட்கொண்டு போதையிலேயே இருக்கின்றார்கள். நடு இரவில் உடலெங்கும் திருநீறு பூசி, எரியும் சிதையிலிருந்து மாமிசம் எடுத்துச் சாப்பிடுகிறார்கள்.
■காசி நகரத்து இளைஞர்களும், வெளியூர்களிலிருந்து வரும் இளைஞர்களும் காசியில் சுலபமாகக் கிடைக்கும் போதைப் பொருட்களை வாங்கி போதைக்கு அடிமையாகிறார்கள்.
■புனித நதி என்று சொல்லப்படும் கங்கை அசுத்தம் நிறைந்ததாகவே இருக்கிறது. இந்த அசுத்த நதியில் குளித்தால் பாவம் தீர்ந்து மோட்சம் கிட்டும் என்றும், இங்கு வந்து திவசம் செய்வதால் முன்னோர்களின் ஆன்மா சந்தியடைந்து அவர்களின் சாபம் தீரும் என்றும் நம்பி ஏராளமான இந்துக்கள் காசி நகரத்திற்கு வந்த வண்ணம் உள்ளனர்.
சன் டிவி காட்டாமல் மறைத்த விஷயங்கள்

கங்கைக் கரையில் கட்டங்கள் பல இருப்பதை நாம் மேலே பார்த்தோம். அவற்றில் ஹரிச்சந்திர கட்டம் என்பது உண்மையிலேயே பிணங்கள் எரிக்கப்படும் இடம் தான். இங்கு தான் ஹரிச்சந்திரன் சுடுகாட்டின் காவலனாக இருக்கும் போது அவன் மனைவி சந்திரமதி இறந்து போன அவர்களின் மகனுக்கு ஈமக் கிரியைகள் செய்ய வருகிறாள். எனவே தான் அந்த இடத்திற்கு ஹரிச்சந்திர கட்டம் என்று பெயர் வந்தது. இந்து மத சாஸ்த்திரப்படியே இறந்தவர்களின் உடலை எரித்த பின்னர் அவர்களின் அஸ்தியை கடலிலோ, நதியிலோ கரைப்பது வழக்கம். மேலும் கங்கை பாவங்களைப் போக்கும் புண்ணிய நதி என்ற நம்பிக்கை இருப்பதால் அங்கு வந்து பிணங்களை எரித்து அஸ்தியைக் கரைப்பதென்பது சாதாரணமான விஷயம். இதை ஏதோ ஒரு கேவலமான விஷயம் போல சித்தரித்தது சன் டிவி. கங்கைக்கரையில் நடத்தப்படும் புண்ணியம் மிகுந்த பித்ரு காரியங்களையோ, யாத்ரீகர்கள் கங்கா மாதாவிற்குச் செய்யும் பூஜைகளையோ, தினமும் அந்தி சாயும் நேரத்தில் அற்புதமாக நடக்கும் ஆரத்தி வழிபாட்டையோ சன் டிவி காட்டவில்லை.

அதற்கு நேர்மாறாக நடு இரவில் அகோரிகள் அலைந்து திரிந்து போதை வஸ்துக்களை உட்கொள்வதைக் காட்டினர். அகோரிகள் என்பவர்கள் ஒரு காலத்தில் இருந்ததாகச் சொல்லப்பட்டது. காபாலிகர்கள் என்பவர்களைப் பற்றியும் நாம் படித்திருக்கிறோம். ஆனால் அவர்கள் இப்போதும் இருக்கிறார்கள் என்று சொல்வதெல்லாம் வெறும் கட்டுக்கதை. தலை முடி வளர்த்துக்கொண்டு, உடலெல்லாம் விபூதி பூசிக் கொண்டு, சதா சர்வ காலமும் போதை ஏற்றிக் கொண்டு இருக்கும் “நாகா” சாமியார்கள் இருக்கிறார்கள். அவர்களும் பிரயாகை என்று சொல்லப்படும் அலகாபாத்தில் தான், அதுவும் கும்ப மேளா சமயத்தில் தான் இருப்பார்கள். பிறகு தங்கள் இடங்களுக்குச் சென்று விடுவார்கள். ஆனால் அவர்கள் சன் டிவி காட்டியதைப் போல் உடையணிந்தவர்கள் அல்ல. நிர்வாணச் சாமியார்கள். மேலும் அவர்கள் பிணம் தின்பவர்கள் அல்ல. சன் டிவியிலும் ஒரே ஒருவரைத் தான் பிணம் தின்பதைப்போல் காட்டினார்கள். ஆனால் அவர் சாமியாரைப் போலல்லாமல் மொட்டைத் தலையராக இருந்தார். நெற்றியிலோ உடலிலோ திருநீறும் பூசியிருக்கவில்லை. மேலும் அவர் எரியும் சிதையருகே உட்கார்ந்து கொண்டு ஏதோ மாமிசம் ஒன்றை (ஆடோ, கோழியோ, ஏதோ ஒன்று) தின்பது போல் காட்டினார்களே ஒழிய, சிதையிலிருந்து அவர் நர மாமிசத்தை எடுத்து சாப்பிடுவதாகக் காட்டவில்லை.

காசியில் உள்ள பிரசித்தி பெற்ற ஆலயங்கள் பக்கம் தப்பித் தவறி கூட படப்பிடிப்புக் குழு செல்லவில்லை. கங்கையில் நடக்கும் பூஜை வழிபாடுகளைக் காண்பிக்கவில்லை. வரலாற்றுச் சிறப்பு மிக்க இடங்களைக் காட்டவில்லை. காசி நகரம் எவ்வளவு சிறந்த கல்விச்சாலையாக இருந்திருக்கிறது என்பதைச் சொல்லவில்லை. பாரத தேசத்தின் ஆன்மீகம், கலாசாரம், பாரம்பரியம் ஆகியவை சிறக்க காசியை ஆண்ட மன்னர்கள் எவ்வளவு சேவைகள் செய்துள்ளார்கள் என்பதைச் சொல்லவில்லை. அங்கு உள்ள விஸாலாட்சி கோவில் நம் தமிழகத்தைச் சேர்ந்த நகரத்தார்களால் அருமையாக நிர்வாகம் செய்யப் படுகின்ற நல்ல விஷயத்தைப் பற்றிச் சொல்லவில்லை சன் டிவி.

முகலாயர்கள் எவ்வாறு காசி நகரத்தை அழித்தார்கள் என்றும், காசி விஸ்வநாதர் ஆலயம் போன்ற ஏராளமான ஆலயங்களை அவர்கள் எவ்வாறு அழித்தார்கள் என்பதைச் சொல்லவில்லை. இன்றும் விஸ்வநாதர் ஆலயத்தின் நந்தி மசூதியைப் பார்த்தவண்ணம் நின்றிருப்பதே முகலாயர்கள் ஆலயத்தை இடித்து தரைமட்டமாக்கி அவ்விடத்தில் மசூதியைக் கட்டியுள்ளார்கள் என்பதற்குச் சரியான சாட்சி என்பதைச் சொல்லவில்லை.

காலம் சென்ற ஷெனாய் இசைக்கலைஞர் உஸ்தாத் பிஸ்மில்லாகான் இஸ்லாமியராக இருந்தாலும் கங்கை நதியையும், விஸ்வநாதர் ஆலயத்தையும் எவ்வாறு போற்றினார் என்கிற மத நல்லிணக்கத்துக்கு உதாரணமான உண்மையைச் சொல்லவில்லை. அம்மத நல்லிணக்கத்தை உடைகும் விதமாக, சங்கடங்களைத் தீர்த்து மோட்சம் அளிக்கும் சங்கட் மோட்சன் ஹனுமான் கோவிலிலும், காசி ரெயில் நிலையத்திலும் இஸ்லாமியப் பயங்கரவாதிகள் எவ்வாறு குண்டு வைத்துத் தாக்கினர் என்று காட்டவில்லை.

தங்களுக்குச் சிறிதும் சம்பந்தமே இல்லாத கங்கைக் கரையில் கிளை அலுவலகம் அமைத்து “மிஷநரீஸ் ஆஃப் சாரிடி” அங்கு வாழும் ஓடக்காரர்களை கிறுத்துவர்களாக மதம் மாற்றுவதைப் பற்றி விளக்கவில்லை. இந்துக்கள் தங்கள் பித்ருக்களுக்கு கங்கையின் ஐந்து கட்டங்களிலும் ஓடத்தில் சென்று தான் காரியங்கள் செய்ய வேண்டும். மேலும் கங்கைக் கரையிலும் நீரிலும் இந்துக்கள் தங்கள் காரியங்களைச் செய்வதற்கு ஓடக்காரர்களின் உதவி பெரிதும் இன்றியமையாதது. எனவே அவ்வாறு ஓடக்காரர்களை மதம் மாற்றுவதன் மூலம் இந்துக்களின் முக்கியமான ஆன்மீக கலாசார நிகழ்வுகளை அடியோடு அழிக்க நினைக்கிறார்கள் கிறுத்துவ மிஷநரிகள் என்கிற உண்மையை சன் டிவி சொல்லவில்லை.

கங்கை நதியின் அசுத்தத்திற்கு ஏதோ இந்துக்கள் தான் காரனம் என்பது போன்று சித்தரிக்கிறது சன் டிவி. அங்கு உள்ள மக்களுக்கு அடிப்படை வசதிகள் கூட அரசாங்கம் செய்து தரவில்லை என்பதைச் சொல்லவில்லை. கங்கைக் கரையை ஒட்டியுள்ள பனாரஸ் பட்டுத் துணிகள் தயாரிப்பு நிறுவனங்கள் தங்களின் சாயக்கழிவுகளை கங்கை நதியில் கலக்கவிடுவதைக் காட்டவில்லை. கரையில் உள்ள விடுதிகளிலிருந்து கழிவுகளும் நதியில் கலப்பதைக் காட்டவில்லை. கங்கையைச் சுத்தம் செய்வதற்காக அரசு செலவிடும் கோடிக்கணக்கான மக்களின் வரிப்பணம் அரசியல் வாதிகளின் வங்கிகளை நிறப்புவதைப் பற்றிச் சொல்லவில்லை.

சாரநாத் சென்று அங்கே தழைத்தோங்கிய புத்த மதத்தைப் பற்றி ஒரு வார்த்தை கூடச் சொல்லவில்லை. அங்கேயுள்ள சைவ, பௌத்த, ஜைன ஆலயங்களைக் காட்டவில்லை. புத்த கயாவிலிருக்கும் அதே போதி மரம் அங்கும் இருப்பதைக் காட்டவில்லை. சீனக் கோவில்களைக் காண்பிக்கவில்லை.

சன் டிவியின் ரகசிய குறிக்கோள்

வெறும் பிணங்கள் எரிவதையும், பிச்சைக்காரர்களைச் சாமியார்களாகவும், அந்திம காலத்தில் நிம்மதியாக இறைசேவை செய்பவர்களை மரணத்தைத் தேடி வந்தவர்களாகவும், சித்தரித்து இந்து மதத்தைக் கேவலப் படுத்துவதற்காகவே சன் டிவி ஒரு குழுவை ஆயிரக்கணக்கான மைல்களுக்கு அப்பால் உள்ள காசி நகரத்திற்கு அனுப்பியுள்ளது. புண்ணிய ஸ்தலமான காசியையும், புண்ணிய நதியான கங்கையையும், சிறுமைப் படுத்தி, அவற்றைப் பார்வையாளர்கள் வெறுத்து ஒதுக்க வேண்டும் என்கிற ஒரே எண்ணத்துடன், மீண்டும் மீண்டும் பிணங்களையும், போதை ஏற்றும் பிச்சைக்காரர்களையுமே காட்டி, அது தான் உண்மையான காசியின் நிஜ முகம் என்று மக்களை ஏமாற்ற முயன்றுள்ளது சன் டிவி நிறுவனம். அயோக்கியத்தனமான அம்முயற்சியில் ஹிந்துக்களின் ஆன்மீக, கலாசார உணர்வுகளைப் பெரிதும் புண்படுத்தியுள்ளது இந்த அழுக்கு நிறுவனம். இது மிகக்கடுமையாகக் கண்டிக்கப் படவேண்டிய ஒரு விஷயம்.

சன் டிவியிடம் சில கேள்விகள்

* இந்து மத பழக்கவழக்கங்களை அவமதிப்பு செய்து அவற்றைப் பற்றி அவதூறாக சித்தரித்து நிகழ்ச்சிகள் ஒளிபரப்புவதைப் போல் மற்ற மதங்களில் நடக்கும் அசிங்கங்களையும், அராஜகங்களையும் ஏன் நிஜம் நிகழ்ச்சியில் காண்பிப்பதில்லை?

* காசி நகரத்தின் மறு பக்கம் என்று காண்பிப்பதைப்போல், நாகூரின் மறுபக்கம் என்றோ வேளாங்கன்னியின் நிஜ முகம் என்றோ காண்பிக்கத் தைரியம் இருக்கிறதா?

* ஆயிரம் மைல்களுக்கு அப்பால் உள்ள காசி நகரத்திற்குச் சென்று படம்பிடித்த மாதிரி, இதோ சில நூறு மைல்களே தள்ளியுள்ள கேரளத்திற்குச் சென்று அங்கு உள்ள சர்ச்சுகளில் பாதிரிமார்கள் நடத்தும் லீலாவினோதங்களைப் பற்றி ஒரு நிகழ்ச்சி நடத்த தைரியம் இருக்கிறதா?

* ஒரு கன்னியா ஸ்த்ரீயே எழுதியுள்ள “ஆமென்” என்ற புத்தகத்தில் உள்ள உண்மையான நிகழ்வுகளைப் படம் பிடித்து ஒளிபரப்பலாமே? கத்தோலிக்க சர்ச்சின் நிஜ முகம் அல்லது கத்தோலிக்க மதகுருமார்களின் மறு பக்கம் என்று காண்பிக்கலாமே?

* அதே கேரளம் தான் இன்று இஸ்லாமிய பயங்கரவாதிகளின் பிறப்பிடமாக இருந்து வருகிறது. அதைப் பற்றி ஒரு ‘நிஜம்’ நிகழ்ச்சி காட்டலாமே? மதரசாக்களில் என்ன நடக்கிறது என்று படம் பிடிக்கத் தைரியம் இருக்கிறதா?

* அம்மாநிலத்தில் நடக்கும் ‘லவ் ஜிகாத்’ பற்றிப் பல வாரங்கள் தொடர்ந்து நிகழ்ச்சி செய்யலாமே? அதற்குத் தைரியம் இருக்கிறதா?

* ஏன் கேரளத்திற்குச் செல்ல வேண்டும்? சென்னையிலேயே கிழக்குக் கடற்கரைச் சாலையில் உள்ள ஏராளமான கிறுத்துவ அனாதைக் குழந்தை விடுதிகளிலும், பெண்கள் காப்பகத்திலும் நடக்கும் பாலியல் வன்முறைகளைக் காண்பிக்கும் தைரியம் இருக்கிறதா? அங்கு நடக்கும் ஊழல்களையும், அங்கு வந்து தங்கும் வெளிநாட்டினர் அந்த அனாதைப் பெண்களையும் குழந்தைகளையும் எவ்வாறு சித்திரவதை செய்கின்றனர் என்று காட்டலாமே?

* யோபு சரவணன் போன்ற, அப்பாவி மக்களின் சொத்துக்களைச் சூறையாடிய, பாதிரிகளைப் பற்றி ஒரு நிஜம் நிகழ்ச்சி செய்யலாமே?

இந்த லிங்கில் உள்ள செய்திகளை போடா தயாராகுமா சன் டிவி

http://devapriyaji.activeboard.com/forum.spark?aBID=134804&p=3&topicID=34454994
* காசியின் மறுபக்கத்தைப் போல் மதுரையின் மறுபக்கத்தைக் காட்டத் தைரியம் இருக்கிறதா? மதுரையில் நடக்கும் அரசியல் அராஜகங்களைக் காட்ட வேண்டியது தானே? தங்களின் நிறுவன அலுவலகத்தையே கொளுத்தி மூன்று அப்பாவிகளைக் கொன்றார்களே! பேருக்கு சி.பி.ஐ. விசாரணை என்று சொல்லி ஒரே மாதத்திற்குள் ஜாமினில் வெளிவந்து, இப்போது அனைவரும் விடுதலையாகி சுதந்திரமாக வெளியில் உலவுகிறார்களே! இவர்கள் அந்த மூன்று அப்பாவிகளை ஏன் கொன்றார்கள்? யார் சொல்லிக் கொன்றார்கள்? சாட்சிகள் ஏன் மனம் மாறினார்கள்? அவர்கள் மிரட்டப் பட்டார்களா? இதையெல்லாம் ‘மதுரையின் நிஜ முகம்’ என்று காண்பிக்க வேண்டியது தானே? தாக்கப் பட்டது சன் டிவி அலுவலகம் தானே? இறந்து போனவர்கள் சன் டிவி குழுமத்தைச் சேர்ந்த தினகரன் அலுவலகத்தில் வேலைப் பார்த்தவர்கள் தானே? கொலைகாரர்கள் விடுதலையானவுடன் உயர் நீதி மன்றத்தில் ஏன் மேல்முறையீடு செய்யவில்லை? இதையெல்லாம் பற்றி நிஜம் நிகழ்ச்சி நடத்துவது தானே?

கண்டிக்க வேண்டும், எதிர்க்க வேண்டும்

விஜய் டிவியில் ’நீயா நானா’ நிகழ்ச்சியிலும், ‘நடந்தது என்ன’ நிகழ்ச்சியிலும் எவ்வாறு ஹிந்துக்களைப் புண்படுத்துகிறார்களோ, அதே போல் தான் சன் டிவி மற்றும் ஏனைய சானல்களிலும் செய்கிறார்கள். விஜய் டிவிக்கு எதிராக வலுவான கண்டனம் பதிவு செய்யப் பட்டது. அதே போல் சன் டிவிக்கு எதிராகவும் கண்டனம் பதிவு செய்யப் பட வேண்டும். நிஜம் போன்ற நிகழ்ச்சிகளைப் புறக்கணிக்க வேண்டும். அந்நிகழ்ச்சிகளை விளம்பரம் மூலம் ஆதரிக்கும் நிறுவனங்களுக்கு எச்சரிக்கை விடுக்க வேண்டும். இத்தகைய எச்சரிக்கைகள் பயனளிக்காவிட்டால் அந்த நிறுவனங்களின் தயாரிப்புகளை/சேவைகளை முற்றிலும் புறக்கணிப்போம் என்ற நிலைப்பாடு எடுக்க வேண்டும்.

நம் கண்டனத்தையும் எதிர்ப்பையும் மடல்கள் மூலமும் தொலை பேசி மூலமும் தெரிவிக்க வேண்டும்.

சன் டிவியின் முகவரியும், தொலைபேசி எண்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

Sun Network Corporate Office
4, Norton Road,
Mandaveli, Chennai-28
Tamil Nadu, India.
Phone No: 044-24648181
Fax: 044-24648282 Fax us at: 91-44-24648250

email: queries@sunnetwork.in, queries@sunnetwork.in

மேலும் “கேபிள் டெலிவிஷன் நெட்வொர்க் ரூல்ஸ், 1994” - இன் படி கொடுக்கப்பட்டுள்ள “நிகழ்ச்சி மற்றும் விளம்பர விதி-6” - இன் கீழ் சொல்லப்பட்டுள்ள நெறிகளை மீறுவதாக இந்த நிகழ்ச்சி இருப்பதால், தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்திற்கு நாம் புகார் அனுப்பலாம். அனுப்ப வேண்டிய இ-மெயில் முகவரிகள்:

mib.inb@sb.nic.in , psmib.inb@sb.nic.in , msib.inb@sb.nic.in , psmsib.inb@sb.nic.in

மேலும் அமைச்சகத்தைப் பற்றிய தகவல்கள் இங்கே